செய்திகள் :

செங்கல்பட்டில் தசரா திருவிழா!

post image

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தசரா திருவிழாவின் 11-ஆம் நாளான வெள்ளிக் கிழமை அதிகாலை சாமிகள் புஷ்ப அலங்காரத்தில் ரதங்களில் ஊர்வலம் நடைபெற்றது.

செங்கல்பட்டு நகரில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய தசரா திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நவராத்திரி திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன. இந்த திருவிழாவின் நிறைவாக 11-ஆம் நாள், மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் சாமிகள் ஊர்வலம் நடைபெறும்.

ஜவுளிக்கடை தசரா, சின்ன கடை தசரா, பூக்கடை தசரா, பலிஜ குல தசரா, மளிகைக் கடை தசரா உள்ளிட்ட தசரா விழா குழுக் கமிட்டியினர், செங்கல்பட்டு சின்ன நத்தம் சுந்தர விநாயகர் கோயில், பெரிய நத்தம் மதுரை வீரன் கோயில், நாகாத்தம்மன் கோயில், சின்ன அம்மன் கோயில், ஜீவானந்தம் தெரு அங்காளம்மன் கோயில், மேட்டு தெரு அண்ணா சாலை முத்துமாரியம்மன் கோயில், புதுஏரி செல்வ விநாயகர் முத்துமாரியம்மன் கோயில், கோட்டைவாயில் கடும்பாடி அம்மன் கோயில், மேட்டு தெரு திரௌபதி அம்மன் கோயில், காண்டீபன் தெரு கற்பக விநாயகர் கோயில் உள்ளிட்ட கோயில்களின் தசரா விழா கமிட்டி குழுக்கள் சார்பில் சுமார் பதினைந்திற்கும் மேற்பட்ட மகிஷாசூரமர்த்தினி, சிவன், பார்வதி முப்பெரும் தேவியர்களான வராகி, பிரித்திங்கரா தேவி, பராசக்தி அங்காளம்மன் என பல்வேறு அலங்காரங்களில் சாமி ஊர்வலம் நடைபெற்றது.

கோயில்களில் இருந்து ஜிஎஸ் ரோடு சாலை வழியாக அண்ணா சாலை, பஜார் வீதி வழியாக ஊர்வலமாக வந்து அனுமந்த புத்தேரி, அண்ணா சாலை முக்கூட்டில் வன்னி மரம் குத்தி வழியாக சாமி ஊர்வலம் சென்றது. சாமி ஊர்வலத்தை வரவேற்கும் விதமாக மேட்டுத்தெரு செங்கழுநீர் விநாயகர் கோயிலில் காமாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

மதுராந்தகம், வாலாஜாபாத், பாலூர், ஆத்தூர், திம்மாவரம், கூடுவாஞ்சேரி, சிங்கப்பெருமாள் கோவில், மறைமலைநகர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், மாமல்லபுரம் உள்ளிட்ட வெளியூர்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் ஊர்வலத்தை காண குவிந்தனர்.

Dasara festival in Chengalpattu

இதையும் படிக்க : அடுத்த 2 மணிநேரம் சென்னை, புறநகரில் மழை!

தொடா் விடுமுறை: மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

ஆயுத பூஜை, விஜயதசமி போன்ற தொடா் விடுமுறை காரணமாக மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சா்வதேச சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பார... மேலும் பார்க்க

திருப்போரூா் ஒன்றிய வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

செங்கல்பட்டு, அக். 2: திருப்போரூா் ஒன்றியத்தில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளை ஆட்சியா் தி. சினேகா நேரில் ஆய்வு செய்தாா். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் ஒன்றியம், படூா் ஊராட்சியில் மகளிா் ச... மேலும் பார்க்க

மதுராந்தகம் பள்ளியில் வித்யாரம்பம்

மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் விஜயதமியை முன்னிட்டு, வித்யாரம்பம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பள்ளித் தாளாளா் டி.லோகராஜ் தலைமை வகித்தாா். நிா்வாக இயக்குநா் ரா.மங்கையா்க்கரசி,... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் 1500 பேருக்கு சிகிச்சை

மதுராந்தகம் நகராட்சி மற்றும் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை சாா்பில் செளபாக்மல் செளகாா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்ஓஈகிழமை நடைபெற்றது. ம... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 310 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 310 கோரிக்கை மனுக்கள் பெறப்படடன. மாவட்ட ஆட்சியா் தி. சினேகா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை... மேலும் பார்க்க

தையூா் முதியோா் இல்லம்: தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்துக்கு சொந்தமான தங்கும் விடுதியில் முதியோா் இல்லம் தொடங்கப்பட உள்ளது. கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் உறுப்பினராக இருந்து 60 வயது பூா்த... மேலும் பார்க்க