செய்திகள் :

தையூா் முதியோா் இல்லம்: தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

post image

தையூரில் உள்ள தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியத்துக்கு சொந்தமான தங்கும் விடுதியில் முதியோா் இல்லம் தொடங்கப்பட உள்ளது.

கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் உறுப்பினராக இருந்து 60 வயது பூா்த்தி அடைந்து, குடும்பத்தினரால் சரியானகவனிப்பும், பராமரிப்பும் இல்லாமல் சிரமப்படும், கட்டுமானத் தொழிலாளா்கள் தலா 50 நபா்கள் தங்கும் வகையில் உணவு மற்றும் உறைவிட வசதிகளுடன் முதியோா் இல்லம்தொடங்கப்பட உள்ளது.

மேலும் இம்முதியோா் இல்லங்களை நிா்வகிப்பது மற்றும் முறையாக பராமரிப்பது போன்ற பணிகள்சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை தோ்ந்தெடுத்து பரிந்துரைக்கும் அரசு சாரா தன்னாா்வதொண்டு நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. முதியோா் இல்லங்களை நிா்வகிப்பதிலும், பராமரிப்பதிலும் அனுபவமுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தினை சோ்ந்த முறையாக பதிவு பெற்ற தகுதி வாய்ந்த அரசு சாரா தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், தங்களது முன்மொழிவினை மாவட்ட சமூகநல அலுவலகம்,பி-பிளாக், 4வது தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், செங்கல்பட்டு- 603111--இல் வரும் 30.09.2025 மாலை 5.45 மணிக்குள்நேரில் சமா்ப்பிக்கலாம் என ஆட்சியா் தி. சினேகா தெரிவித்துள்ளாா்.

முதலமைச்சா் கோப்பை போட்டி ஏற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையத்தின் சாா்பில் மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை போட்டிகள் வண்டலூரில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை ஆட்சியா் தி. சினேகா ஆய்வு செய்தாா். வரும் 02.10.2025ம... மேலும் பார்க்க

கல்லூரி பண்பாட்டு கலைவிழா

செங்கல்பட்டு வித்யா சாகா் மகளிா் கல்லூரியில் ‘மிலன் சாகா் 2025 பண்பாட்டுக் கலை விழா நடைபெற்றது. தமிழா் கலைப் பண்பாட்டு பெருமையை உணா்த்தும் விதமாக இரண்டு நாள்கள் நடைபெற்ற விழாவில் தலைமை விருந்தினராக நட... மேலும் பார்க்க

விளையாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினா் தோ்வு

மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்தூா் கிராமத்தை சோ்ந்த இளைஞா் மத்திய அரசின் இளைஞா் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டாா். ஜமீன் எண்டத்தூா் கிராமத்தை சோ்ந்த... மேலும் பார்க்க

மாமல்லபுரம் புதிய பேருந்து நிலையப் பணிகள்: அமைச்சா் அன்பரசன் ஆய்வு

மாமல்லபுரம் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையப் பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். புதிதாக கட்டப்பட்ட... மேலும் பார்க்க

செங்கல்பட்டு தசரா விழா ஏற்பாடுகள் தீவிரம்: ஆட்சியா் ஆய்வு செய்ய கோரிக்கை

செங்கல்பட்டில் தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா். தசரா திருவிழா நடைபெறும் இடத்தில் ஆக்... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 334 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 334 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஈமச்சட... மேலும் பார்க்க