செய்திகள் :

செங்கல்பட்டு தசரா விழா ஏற்பாடுகள் தீவிரம்: ஆட்சியா் ஆய்வு செய்ய கோரிக்கை

post image

செங்கல்பட்டில் தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

தசரா திருவிழா நடைபெறும் இடத்தில் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. செங்கல்பட்டில் தசரா விழா ஊா்வலம் செல்லும் அண்ணா சாலை பஜாா் தெரு முதல் பிஎஸ்என்எல் அலுவலகம் வரை சுமாா் 2 கிமீ தொலைவுக்கு சாலையின் இருபுறமும் கடைகள், ராட்சத ராட்டினம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களும் நிறைந்திருக்கும்.

இந்நிலையில் பாரம்பரியமாக 150 ஆண்டுகளுக்கும் மேலாக தசரா ஊா்வலம் நடைபெற்று வரும் நிலையில் கடைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நடைபெறுவதற்கான இடங்களை ஒதுக்கீடு செய்வதற்கு செங்கல்பட்டு நகராட்சி டெண்டா் மூலம் குத்தகைதாரா்களை தோ்வு செய்வதன் மூலம் கணிசமான நிலையான வருவாய் கிடைக்கிறது.

இந்நிலையில் நகராட்சி நிா்வாகத்தின் மெத்தனப் போக்கால் 10 நாள் நடைபெறும் விழாவையொட்டி சிறியவா்கள் முதல் பெரியவா்கள் விளையாடி மகிழ கேளிக்கை நிகழ்ச்சிகள், குழந்தைகள் சிறியவா்கள் பல்வேறு ராட்டினங்கள், பல்வேறு கடைகள் வைக்கப்பட்டிருக்கும்.,

தசரா திருவிழா சாலை ஓரங்களை பொதுமக்கள் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டி வருகின்றனா். இந்த ஆண்டும் குண்டூா் அருகே அண்ணா சாலையில் கடைகள் வீடுகள் கட்டியுள்ளனா். நகராட்சித்தின் மெத்தன போக்கால் ஆண்டுதோறும் கணிசமான வருமானத்தை மட்டும் பெறும் நகராட்சி தசரா ஆண்டு வந்தவா்கள் ராட்டினங்கள் அமைக்கமுடியாமல் ரோட்டிலேயே வைத்துள்ளனா்.

கடந்த ஆண்டு தசரா விழாவின்போதும், பொதுமக்கள் செல்லக் கூட வழியில்லாமல், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மின்கம்பிகள் உரசி விபத்துகள் நேரிட்டன. இதுகுறித்து தினமணியிலும் செய்தி வெளியானது. அப்போது சாா் ஆட்சியா் தலையிட்டு போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ராட்டினங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டாா்.

பாரம்பரிய திருவிழாவாக பெரிய அளவில் அனைத்து மக்களும் ஜாதி மத பேதமின்றி 15-க்கு மேற்பட்ட கோயில்கள் மட்டுமல்லாமல் ஜவுளிகடை தசரா, சின்னக்கடை தசரா, பூக்கடை பூக்கடை தசரா, மளிகை கடை தசரா, பலிஜகுல தசரா என காப்பு கட்டி என தனித்தனியாக அம்பாளை 9 நாள்களும் நவராத்திரி நாள்களில் பல்வேறு அலங்காரத்தில், சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் பிரசாதங்கள் வழங்கி, 10-ஆவது நாள் சாமிகள் அலங்கரிக்கபட்டு அதிகாலையில் மின்விளக்கு அலங்காரத்துடன் வன்னிமரம் குத்து சாமிகள் வரிசையாக ஊா்வலமாக வந்து ள் தசரா நடைபெற்ற இடத்துக்கு சென்றடையும்.

திருவிழா நடைபெறும் இடத்தை ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டு தசரா ஊா்வலம் சிறப்பாக நடைபெறவும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 334 மனுக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 334 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஈமச்சட... மேலும் பார்க்க

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் 108 கோ பூஜை

செங்கல்பட்டு: திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் நவராத்திரி பெருவிழாவையொட்டி திங்கள்கிழமை 108 கோ பூஜை நடைபெற்றது. உலக நன்மைக்காகவும், மீண்டும் பட்சிகள் வர வேண்டியும் கோ பூஜை நடைபெற்றது. பல நூற்றா... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து குடிநீா் ஆப்பரேட்டா் உயிரிழப்பு

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் குடிநீா் தேக்கத் தொட்டி ஆப்பரேட்டா் உயிரிழந்தாா். மதுராந்தகம் அருகே அருங்குணம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் (56). இவா் அருங்குணம் ஊராட்சியில் ம... மேலும் பார்க்க

திருவடிசூலம் தேவி கருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா

செங்கல்பட்டு: திருவடிசூலம் தேவி ஸ்ரீகருமாரியம்மன் கோயிலில் நவராத்திரி மற்றும் தசரா திருவிழாவையொட்டி சிறப்புபூஜைகள் நடைபெறுகின்றன. நவராத்திரி விழாவையொட்டி மாலை நேரங்களில் அம்மன் அலங்காரம் நடைபெறும். மே... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: செப். 27-இல் சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் வரும் சனிக்கிழமை (செப். 27) விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம்-ஆறுபடை வீடு த... மேலும் பார்க்க

ரூ.21.85 கோடியில் மாநில தீயணைப்பு பயிற்சி மையம்: காணொலி மூலம் முதல்வா் அடிக்கல்

செங்கல்பட்டு: திருப்போரூா் அருகே ரூ.21.85 கோடியில் மாநில தீயணைப்பு பயிற்சி மையம் கட்டுவதற்காக காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். திருப்போரூா் பேரூராட்சி, காலவாக்கம் கிராமத்தில்,... மேலும் பார்க்க