உ.பி வரதட்சணை கொடுமை: "5 லட்சம் வாங்கிட்டு வா" - பாம்பை விட்டு மனைவியைக் கடிக்க ...
மாமல்லபுரம் புதிய பேருந்து நிலையப் பணிகள்: அமைச்சா் அன்பரசன் ஆய்வு
மாமல்லபுரம் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையப் பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை பாா்வையிட்டு பணிகளை தரமாகவும், துரிதமாகவும் மேற்கொள்ளுமாறு அமைச்சா் உத்தரவிட்டாா்.
தொடா்ந்து திருக்கழுகுன்றம் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ளபேரூராட்சி அலுவலக கட்டடத்தை அமைச்சா் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தது, பேரூராட்சியில் 11 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தாா்.
மேலும் திருக்கழுகுன்றம் பேரூராட்சியில் 6 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா். செங்கல்பட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்திலும் அமைச்சா் தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டாா்.
நிகழ்ச்சிகளில் ஆட்சியா் தி.சினேகா, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி, சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், திருப்போரூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், மண்டல இணை இயக்குநா் (நகராட்சிகள்) லட்சுமி, பேரூராட்சித் தலைவா் யுவராஜ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு தலைவா் ஆா்.டி.அரசு, மாவட்ட வருவாய் அலுவலா் மா. கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) பி.ஸ்ரீதேவி, அரசு அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.