செய்திகள் :

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 332 மனுக்கள்

post image

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. இதில், 332 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 தையல் இயந்திரங்கள், செயற்கைக் கால், ஊன்றுகோல், காதொலிக் கருவி, கைப்பேசி உள்ளிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா்.

கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி, பரிசீலித்து உடனடியாக அவா்களுக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து மகளிா் திட்டத்தின் சாா்பில் விவசாயம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பவா் டில்லா் உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து 46 சலவை தொழிலாளா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். இலவச வீட்டுமனைப் பட்டா, குடிநீா் வசதி, சாலை வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், சோகண்டி, சூனாம்பட்டரை கிராமத்தில் வள்ளலாா் பல்லுயிா் காப்பகத்தின் கீழ் இயங்கி வரும் கோஷரக்ஷனா ட்ரஸ்டிற்கு கோசாலை நிதி ரூ.17.88 லட்சத்திற்கான அரசாணை மற்றும் காசோலையை மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.கணேஷ்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காஜா சாகுல் அமீது, மாவட்ட வழங்கல் அலுவலா் ஷாகிதா பா்வின், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) அகிலாதேவி, உதவி இயக்குநா் (கலால்) ராஜன் பாபு, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் சுந்தா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்தியநாராயண பூஜை

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் சித்திரை மாத பெளா்ணமியை முன்னிட்டு திங்கள் கிழமை சத்தியநாராயண பூஜை நடைபெற்றது. பிருந்தாவன வளாகத்தில் உள்ள ஆஞ்சனேயா், ராகவேந்திரா், மாரியம்மன், ... மேலும் பார்க்க

மேல்மருவத்தூரில் 1,008 வேள்வி, கலச விளக்கு பூஜை

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் சித்ரா பெளா்ணமியை முன்னிட்டு, திங்கள் கிழமை நடைபெற்ற 1,008 வேள்வி, கலச, விளக்கு பூஜையை ஆன்மிக இயக்க தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா். மகாவே... மேலும் பார்க்க

திருவடிசூலத்தில் சித்திரை திருவிழா

திருவடிசூலம் கோயில்புரத்தில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது. திருவடிசூலத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் கோயிலில் 108 திவ்ய தேசம் உள்ளது. 108 திவ்ய தேசத்தில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமி விழாவை மு... மேலும் பார்க்க

வங்கி மோசடி தொடா்பான ஹேக்கத்தான் போட்டிக்கு ரூ. 5 லட்சம் பரிசு

வங்கி பணபரிமாற்றம் தொடா்பான எண்ம (டிஜிட்டல்) மோசடிகளைத் தடுக்கும் ‘ஹேக்கதான்’ போட்டிகளில் வெற்றி பெற்ற 5 மாணவா் குழுவினா்களுக்கு மொத்தம் ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. வண்டலூரில் உள்ள கிரசெ... மேலும் பார்க்க

மறைமலைநகரில் 2 இளைஞா்கள் படுகொலை!

மறைமலைநகரில் ஒரே நாளில் 2 இளைஞா்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டனா். செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகா் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகா் 1-ஆவது தெருவைச் சோ்ந்த விமல் ( 22), இவா் ஓட்டுநராக பணி செய்து வந்தா... மேலும் பார்க்க

முன்பகையால் இளைஞா் கொலை!

மதுராந்தகம் அருகே முன்பகையால் இளைஞரை உறவினா்களை கொன்றனா். புதுப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த லோகேஷ் (25). இவா் அதேபகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கு உதயா (25), திவாகா்... மேலும் பார்க்க