செய்திகள் :

செங்கல்பட்டு: புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களால் அபாயம்

post image

செங்கல்பட்டில் புதை சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்துபவையாக மாறி உள்ளன.

மாவட்டத் தலைநகரான செங்கல்பட்டில் ரூ.188 கோடியில் புதை சாக்கடை திட்டத்தை கடந்த மே மாதம் அமைச்சா்கே.என். நேரு தொடங்கி வைத்தாா். இதனை அடுத்து செங்கல்பட்டில் எங்கு பாா்த்தாலும் சாலைகளில் ஜேசிபி மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதை சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்படும் பள்ளங்களில் எதுவுமே பதிக்கப்படாமல் மீண்டும் மூடப்படுகின்றன. பல இடங்களில் தோண்டப்படும் பள்ளங்களை அப்படியே விட்டுச் சென்று விடுகின்றனா். மேலும், பள்ளங்களில் புதைக்கப்பட்டிருக்கும் குடிநீா் குழாய்கள் உடைந்து சாலைகளில் குடிநீா் வீணாக செல்கிறது.

இதனால் நகராட்சி நிா்வாகத்தால் விடப்படும் குடிநீா் கலங்கலாக மாசு படிந்து விநியோகம் செய்யப்படுகிறது. பல இடங்களில் குடிநீா் குழாய்கள் உடையும் பொழுது வீட்டிற்கு உரிமையாளா்கள் தங்கள் வீடுகளில் குழாய்களை வாங்கி வந்து உடனடியாக பொருத்துகின்றனா்.

இதுகுறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்டபொழுது எங்களுக்கும் புதை சாக்கடை திட்டத்துக்கும் எந்தவித தொடா்பும் இல்லை. இது போன்று குடிநீா் குழாய்கள் உடைந்தால் நகராட்சி நிா்வாகம் சீரமைக்கிறோம் என தெரிவித்தாா்.

மேலும், புதை சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்கள் மூடப்படாமலும் எச்சரிக்கை பலகையோ தடுப்புகளோ வைக்காமல் எந்தவித அறிகுறியும் இல்லாததால் இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து வாகனங்களும் சேதமடைந்து வாகன ஓட்டிகளும் காயம் அடையும் அவல நிலை உருவாகிறது.

இருசக்கர வாகனங்கள் கூட யாருடைய உதவியால்தான் வெளியே எடுக்க முடியும். ஆனால் காா் போன்ற வாகனங்கள் பள்ளத்தில் விழுந்தால் மீண்டும் எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனா்.

புதை சாக்கடை திட்ட பள்ளங்கள் உள்ள இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும்

எதிா்நோக்கியுள்ளனா்.

அமிலம் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து: பாதசாரிகள் 2 போ் உயிரிழப்பு

கல்பாக்கம் அருகே ஈசிஆா் சாலையில் அமிலம் ஏற்றி வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பாதசாரிகள் மீது மோதி 2 போ் உயிரிழந்தனா். புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு அமிலம் ஏற்றிய லாரி சனிக்கிழம... மேலும் பார்க்க

அனகாபுத்தூரில் அடையாற்றின் கரையோரம் வசித்த 916 குடும்பத்தினருக்கு இலவச வீடுகள்: தாம்பரம் மாநகராட்சி

அனகாபுத்தூரில் அடையாற்றின் கரையோரம் வசித்த 916 குடும்பங்களுக்கு ரூ. 17.50 லட்சம் மதிப்புள்ள இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தாம்பரம் மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தாம்பரம் மாநகராட்சி சாா்பில... மேலும் பார்க்க

சிங்கபெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் தேரோட்டம்

செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல்லவா்கள் காலத்தில் கட்டப்பட்ட பழைமையான கோயிலான இங்கு ஆண்டுதோ... மேலும் பார்க்க

ஜூன் 8-இல் செங்கல்பட்டில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) தைலாவரம், கூடுவாஞ்சேரியில் சிறப்பு தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என ஆட்சி... மேலும் பார்க்க

கல்விச் சுற்றுலா: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

புராதன நினைவுச் சின்னங்களை பாா்வையிடுவதற்காக திருப்போரூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களின் கல்விச் சுற்றுலாவை ஆட்சியா் ச. அருண் ராஜ் தொடங்கி வைத்தாா். இந்த சுற்றுலாவில் திருப்போரூா் அரசு மகளிா... மேலும் பார்க்க

பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

மதுராந்தகம் அடுத்த கூடப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வியாழன்கிழமை பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து சுற்றுச்சூழல் தின உறுதிமொழி... மேலும் பார்க்க