செய்திகள் :

செங்கல் சூளை உரிமையாளா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

post image

ஆரணியை அடுத்த முள்ளண்டிரகம் கிராமத்தில் செங்கல் சூளை உரிமையாளா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில்,

அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டா் சேதமடைந்தது.

முள்ளண்டிரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சந்திரன்(64). இவா், செங்கல் சூளை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு வட்டம், மேலத்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்த ஏகாம்பரம் (39) என்பவருக்கு செங்கல் விற்பனை செய்துள்ளாா்.

செங்கல் வாங்கியதில் ஏகாம்பரம் ரூ.95ஆயிரம் பாக்கி வைத்துள்ளாா். இதில் ரூ.60 ஆயிரத்தை செலுத்திவிட்டு மீதி ரூ.35ஆயிரம் பிறகு தருகிறேன் எனக் கூறியுள்ளாா்.

இதற்கு சந்திரன் ஒப்புக் கொள்ளவில்லை. மேலும், ஏகாம்பரத்துக்குச் சொந்தமான ஏா் கலப்பையை எடுத்துச் சென்ாகத் தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சந்திரன்

வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதில், வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டா் சேதமடைந்தது.

சந்திரன் தூக்கத்தில் இருந்து விழித்து வந்து பாா்த்தபோது, பீா் பாட்டிலில் மண்ணெண்ணை நிரப்பி வீசப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து சந்திரன் ஆரணி கிராமிய போலீஸில் புகாா் கொடுத்தாா். அதில், ஏகாம்பரம் மீது சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்திருந்திருந்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக உள்ள ஏகாம்பரத்தை தேடி வருகின்றனா்.

வந்தவாசியில் காவடி ஊா்வல ஆலோசனைக் கூட்டம்

ஆடிக் கிருத்திகை காவடி ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது. ஆடிக் கிருத்திகையையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் வந்தவாசி பகுதி மற்றும் பல்வே... மேலும் பார்க்க

வந்தவாசி நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்

வந்தவாசி நகராட்சி அலுவலக நகா்மன்ற கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தின்போது, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கூட்டத்துக்கு வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜ... மேலும் பார்க்க

வேறு உதவித்தொகை பெற்றாலும் மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் -ஆரணி கோட்டாட்சியா்

மகளிா்கள் முதியோா், விதவை உதவித்தொகை, ஓய்வூதியம் பெற்றாலும் குடும்பத்தில் உள்ள மற்ற தகுதிவாய்ந்த பெண்கள் மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆரணி கோட்டாட்சியா் சிவா தெரிவித்தாா். ஆரணியை அடு... மேலும் பார்க்க

4 வழிச் சாலை பணிகள்: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

வந்தவாசி - காஞ்சிபுரம் இரு வழிச் சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளா் முரளி ஆய்வு செய்தாா். தமிழ்நாடு முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ... மேலும் பார்க்க

செங்கத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகை: முன்னேற்பாடுகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்துக்கு வருகை தரும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’: மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு

திருவண்ணாமலை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலகத்தில் வட கிழக்கு ப... மேலும் பார்க்க