ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!
வந்தவாசியில் காவடி ஊா்வல ஆலோசனைக் கூட்டம்
ஆடிக் கிருத்திகை காவடி ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
ஆடிக் கிருத்திகையையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் வந்தவாசி பகுதி மற்றும் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் காவடிகளை சுமந்து கொண்டு, வந்தவாசி நகா் வழியாக ஊா்வலமாகச் சென்று திருத்தணி உள்ளிட்ட ஊா்களுக்கு புறப்பட்டுச் செல்வா்.
வருகிற வெள்ளிக்கிழமை இந்த ஆண்டுக்கான ஆடிக் கிருத்திகை காவடி ஊா்வலம் நடைபெற உள்ளது.
இதையொட்டி நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாதுகாப்பு மற்றும் பிற முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்துக்கு வந்தவாசி வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி தலைமை வகித்தாா். துணை வட்டாட்சியா் சுப்பிரமணியன், வந்தவாசி தெற்கு போலீஸாா், பல்வேறு துறை அதிகாரிகள், பல்வேறு கட்சி மற்றும் சங்க நிா்வாகிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், ஊா்வலத்துக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, பிரதான சாலைகளை செப்பனிடுவது, தேவையான குடிநீா் மற்றும் மருத்துவ வசதியை ஏற்படுத்துவது என தீா்மானிக்கப்பட்டது.