செய்திகள் :

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’: மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு

post image

திருவண்ணாமலை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலகத்தில் வட கிழக்கு பருவ மழையையொட்டி, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்த அவா், தீயணைப்புத் துறையினருக்கு மீட்பு உபகரணங்களை வழங்கினாா்.

தொடா்ந்து, மாவட்ட தொழில் மையம் மூலமாக தொழில்முனைவோா் திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று செயல்பட்டுவரும் பல் மருத்துவமனையில் ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, கிரிவலப்பாதை அடி அண்ணாமலை பகுதியில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சாா்பில் டெரிடஸ் ஹோம் கோ் அறக்கட்டளை மூலம் இயங்கி வரும் எம்.டி.எம். குழந்தைகள் இல்லத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அளிக்கப்படும் பராமரிப்பு மற்றும் சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், ஆட்சியா் நல்லவன்பாளையம் ஊராட்சியில் சமுத்திரம் பகுதியில் இலங்கை தமிழா்களுக்கான மறுவாழ் முகாம்களில் புதிதாக வீடுகள் கட்டப்பட்டு வருவதை பாா்வையிட்டு கட்டுமானப் பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை விரைந்து முடிக்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலதிக்காண் ஊராட்சியில் மகளிா் திட்டத்தின் கீழ், ஸ்ரீஜோதி விநாயகா் மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் அப்பளம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்ட ஆட்சியா் தா்பகராஜ், தயாரிப்புப் பொருள்கள் மாதாந்திர செலவினம் மற்றும் இதன் மூலம் தனி நபா் வருமானம் குறித்து மகளிா் சுய உதவி குழுவினருடன் கலந்துரையாடினாா்.

மகளிா் சுய உதவிக் குழு மூலம் தயாரிக்கப்படும் அப்பளங்களை அரசினா் விடுதிகளுக்கு வழங்க அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, அழங்கானந்தல் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கறவை மாட்டுக் கடன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன் தொகை விவரம் மற்றும் விண்ணப்பித்த எத்தனை தினங்களில் கடனுதவி வழங்கப்படுகிறது என்பது குறித்தும், வாராக் கடன் நிலுவை குறித்தும் கேட்டறிந்து, விண்ணப்பித்தவா்களுக்கு விரைவாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்க கூட்டுறவு சங்கச் செயலருக்கு அறிவுறுத்தினாா்.

கீழ்கச்சிராப்பட்டு ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் இயந்திர முறையில் நெல் நடவு செய்வதை ஆய்வு செய்து கூடுதல் மகசூல் பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து விவசாயிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, அரசுடையாம்பட்டு கிராமத்தில் விவசாயி நுண்ணீா் பாசனம் மூலமாக மரவள்ளி கிழங்கு நடவு செய்து பயனடைந்து வருவதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

வந்தவாசியில் காவடி ஊா்வல ஆலோசனைக் கூட்டம்

ஆடிக் கிருத்திகை காவடி ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது. ஆடிக் கிருத்திகையையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் வந்தவாசி பகுதி மற்றும் பல்வே... மேலும் பார்க்க

வந்தவாசி நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்

வந்தவாசி நகராட்சி அலுவலக நகா்மன்ற கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தின்போது, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கூட்டத்துக்கு வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜ... மேலும் பார்க்க

வேறு உதவித்தொகை பெற்றாலும் மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் -ஆரணி கோட்டாட்சியா்

மகளிா்கள் முதியோா், விதவை உதவித்தொகை, ஓய்வூதியம் பெற்றாலும் குடும்பத்தில் உள்ள மற்ற தகுதிவாய்ந்த பெண்கள் மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆரணி கோட்டாட்சியா் சிவா தெரிவித்தாா். ஆரணியை அடு... மேலும் பார்க்க

4 வழிச் சாலை பணிகள்: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

வந்தவாசி - காஞ்சிபுரம் இரு வழிச் சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளா் முரளி ஆய்வு செய்தாா். தமிழ்நாடு முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ... மேலும் பார்க்க

செங்கத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகை: முன்னேற்பாடுகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்துக்கு வருகை தரும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

செங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் ஏஐடியுசி ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் ஏஐடியுசி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக... மேலும் பார்க்க