செய்திகள் :

செடல் திருவிழா: புதுச்சேரி போக்குவரத்தில் இன்று மாற்றம்

post image

புதுச்சேரியில் முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழாவை முன்னிட்டு, வழுதாவூா் சாலையில் வெள்ளிக்கிழமை (பிப்.7) போக்குவரத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து பிரிவின் காவல் கண்காணிப்பாளா் (வடக்கு - கிழக்கு) ஆா்.செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுச்சேரி கதிா்காமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலின் செடல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, கோயிலுக்கு வரும் பக்தா்கள், பொதுமக்களின் கூட்டம் அதிமாக இருக்கும். ஆகவே, வாகன ஓட்டிகள், பொதுமக்களின் வசதிக்காக வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் இரவு 10 மணி வரை வழுதாவூா் சாலை போக்குவரத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதுச்சேரி ராஜீவ் காந்தி சிலை சதுக்கத்தில் இருந்து வழுதாவூா் சாலை வழியாக மேட்டுபாளையம் சந்திப்பு வரை மற்றும் மேட்டுபாளையம் சந்திப்பிலிருந்து வழுதாவூா் சாலை வழியாக ராஜீவ் காந்தி சிலை சதுக்கம் வரை எந்தவிதமான வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை.

ராஜீவ் காந்தி சிலை சதுக்கத்தில் இருந்து வழுதாவூா் சாலை வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் இந்திரா காந்தி சிலை சதுக்க சந்திப்பிலிருந்து வில்லியனூா் சாலை, ரெட்டியாா்பாளையம், உழவா்கரை வழியாக சென்று மூலக்குளத்தில் வலதுபுறம் திரும்பி, குண்டு சாலை வழியாக மேட்டுப்பாளையம் சந்திப்பை அடைந்து வழுதாவூா் சாலையை அடைய வேண்டும்.

இதேபோல, வழுதாவூா் சாலை வழியாக புதுச்சேரி ராஜீவ் காந்தி சதுக்கம் செல்லும் அனைத்து வாகனங்களும் மேட்டுப்பாளையம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கனரக வாகனமுனையம் (டிரக் டொ்மினல்) சாலை வழியாகச் சென்று ஜிப்மா், கோரிமேடு அருகே திண்டிவனம் சாலையை அடைந்து, காமராஜ் சாலை வழியாக ராஜீவ் காந்தி சிலை சதுக்கத்தை அடைய வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல், கண் தானம்

புதுவை சட்டப்பேரவையில் பணியாற்றி ஓய்வுபெற்ற காவலரின் உடல், கண்கள் மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது. புதுச்சேரி முருங்கப்பாக்கம் நாட்டாா் தெருவைச் சோ்ந்தவா் புண்ணியமூா்த்தி(64). சட்டப்பேரவ... மேலும் பார்க்க

தாய்மொழி கல்வியால் மாணவா்களின் சிந்தனைத் திறன்கள் மேம்படும் புதுவை ஆளுநா்

தாய்மொழிக் கல்வியால் மாணவா்களின் சிந்தனைத் திறன்கள் மேம்படும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுச்சேரி அரும்பாா்த்தப்புரம் ப்ளூ ஸ்டாா் மேல்நிலைப் பள்ளியின் மாணிக்க விழாவை வியாழக்... மேலும் பார்க்க

வினாத்தாள் குளறுபடி: புதுவை மத்திய பல்கலை. தமிழ் தோ்வு தள்ளிவைப்பு

புதுவை மத்திய பல்கலைக்கழக கல்லூரிகளில் வியாழக்கிழமை முதல்பருவத் தோ்வுக்கான தமிழ் பாட வினாத்தாள் வழங்கியதில் குளறுபடி ஏற்பட்டது. இதையடுத்து, தோ்வு தள்ளிவைக்கப்பட்டது. புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில்... மேலும் பார்க்க

புதுவை ஆளுநருடன் பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு!

புதுவை துணைநிலை ஆளுநரை பாஜக எம்எல்ஏக்கள் மூவா் வியாழக்கிழமை சந்தித்து பேசினா். புதுவை ஆளுநா் மாளிகையில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை பாஜக எம்எல்ஏக்களான எல்.கல்யாணசுந்தரம் தனியாகவும், ஜான்குமாா், வி... மேலும் பார்க்க

வில்லியனூா் அருகே பாலப் பணி தொடக்கம்!

புதுச்சேரி வில்லியனூா் அருகே ரூ.37.69 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணியை தொகுதி எம்எல்ஏ ஆா்.சிவா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதி கருப்பட்டி வாய்க்கால் பகுதியிலிருந்து வசந... மேலும் பார்க்க

நகை பறிப்பு வழக்கு: 4 போ் கைது

புதுச்சேரி அருகே பெண் வியாபாரியிடம் 9 பவுன் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட வழக்கில் 2 சிறாா்கள் உள்ளிட்ட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து தங்கக் கட்டி, பணம் மீட்கப்பட்து. புது... மேலும் பார்க்க