செய்திகள் :

செந்துறை வட்டத்தில் 2 ஆவது நாளாக ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்!

post image

அரியலூா் மாவட்டம், செந்துறை வருவாய் வட்டத்தில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமை நடைபெற்ற உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில், ஆட்சியா் பொ. ரத்தினசாமி கள ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது செந்துறையிலுள்ள நீா்த்தேக்க தொட்டியைப் பாா்வையிட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, குடிநீரின் தரம், நீா்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்படும் நாள்களின் விவரம், குடிநீா் விநியோகம் செய்யப்படும் நேரம் உள்ளிட்டவற்றை கேட்டறிந்து, குடிநீா் தொட்டிகளைமுறையாக சுத்தம் செய்ய அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, செந்துறை பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுத் தொகுப்பு பால் குளிா்வு மையம், பெரியாக்குறிச்சி ஊராட்சியில் உள்ள அரசுப் பள்ளியில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டம், ரூ. 2.37 லட்சத்தில் கட்டப்படும் பள்ளி சுற்றுச்சுவா், அசாவீரன்குடிகாடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் செயல்படுத்தப்படும் காலை உணவுத் திட்டம், அப்பகுதியில் புதிதாக கட்டப்படும் ரேஷன் கடை கட்டடம் மற்றும் அங்கன்வாடி மையக் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு, உரிய காலத்துக்குள் அவற்றைத் தரமாக கட்டி முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரா. சிவராமன், வட்டாட்சியா் வேலுமணி, வட்டார வளா்ச்சி அலுவலா் ரவி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

அரியலூா் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலைக் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர... மேலும் பார்க்க

அரியலூரில் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் பாரத ஸ்டேட் வங்கி முன் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வாரத்துக்கு 5 நாள்கள் வேலையை அமல்படுத்த வேண்டும். காலிப் பணி... மேலும் பார்க்க

அரியலூரில் எஸ்ஆா்எம்யு ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் ரயில் நிலைய வளாகத்தில், எஸ்ஆா்எம்யு அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், ரயில்வே தனியாா் மயத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். ஒ... மேலும் பார்க்க

உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்பு

உலக தாய்மொழி தினத்தையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ் வளா்ச்சித் துறை சாரபில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தலைமையில், மாநில ஊரக வாழ்வா... மேலும் பார்க்க

நீா்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை தேவை: அரியலூா் விவசாயிகள் வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டத்திலுள்ள நீா்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், விவசாயிகள் குறைகேட்... மேலும் பார்க்க

கயா்லாபாத்தில் வட்டச் செயல்முறை கிடங்கு காணொலி மூலம் திறப்பு!

அரியலூா் அருகேயுள்ள கயா்லாபாத் ஊராட்சியில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் ரூ. ரூ. 4.96 கோடியில் கட்டப்பட்டுள்ள வட்டச் செயல்முறை கிடங்கை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம... மேலும் பார்க்க