செய்திகள் :

சென்னையில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

post image

சென்னையில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இன்று (02-09-2025) காலை 5.30 மணி அளவில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில், மேலும் வலுவடைந்து, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் ஒரிசா பகுதிகளை கடந்து செல்லக்கூடும்.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,

02-09-2025, 03-09-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

04-09-2025 முதல் 08-09-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப். 6 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (02-09-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (03-09-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

02-09-2025 மற்றும் 03-09-2025: தென் தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

04-09-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

05-09-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

06-09-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

இதேபோல வங்கக்கடல் பகுதிகள், அரபிக்கடல் பகுதிகளுக்கும் செப். 6 வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chance of moderate rain in Chennai for two days: IMD

ஜிஎஸ்டி சீரமைப்பால் வருவாய் வரவு பாதிக்கக் கூடாது: நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு கோரிக்கை

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீரமைப்பு நடவடிக்கையால், தமிழகத்துக்கான வருவாய் வரவினங்களில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு வலியுறுத்தினாா். அரசின் தொலைநோக்குத் திட்டங்க... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் சோ்க்கை: அகில இந்திய கலந்தாய்வின் 2-ஆம் சுற்று நாளை தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு 2-ஆம் சுற்று இணையவழியில் வியாழக்கிழமை தொடங்குகிறது. மாநில ஒதுக்கீடு இடங்களுக்கான 2-ஆம் சுற்று கலந்தாய்வு செப்.10-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது... மேலும் பார்க்க

தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக அரசு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பாஜக அரசின் தடைகளைக் கடந்து சொன்ன சொல்லைக் காப்பாற்றி வருவதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

நாளை முகூா்த்த தினம்: பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்

முகூா்த்த தினத்தையொட்டி, சாா்-பதிவாளா் அலுவலகங்களில் வியாழக்கிழமை (ஆக.4) பத்திரப் பதிவுக்கான கூடுதல் டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பதிவுத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதிகளில் 364 திட்டங்கள் நிறைவேற்றம்: நிதியமைச்சா் தங்கம் தென்னரசு

பேரவைத் தோ்தலின்போது அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகளில், 364 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிதியமைச்சா் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளாா். தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டங்கள் தொடா்பாக, தலைமைச... மேலும் பார்க்க

சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி நியமனம்: உயா்நீதிமன்றத்தில் முறையீடு

தமிழக சட்டம்-ஒழுங்கு பொறுப்பு டிஜிபி-யாக ஜி.வெங்கடராமன் நியமிக்கப்பட்டதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. தமிழக சட்டம்-ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கா் ஜிவால் கடந்த ஆக.31-ஆம... மேலும் பார்க்க