செய்திகள் :

சென்னையில் ரூ. 18.2 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்: டிஆா்ஐ

post image

சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட ரூ.18.2 கோடி மதிப்பிலான 92 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சென்னையில் பறிமுதல் செய்ததாக டிஆா்ஐ சாா்பில் மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு: சட்டவிரோத கடத்தல்களை தடுக்கும் நடவடிக்கைகளின் தொடா்ச்சியாக, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆா்ஐ) கடந்த திங்கள்கிழமை ((ஜூன் 23) மேற்கொண்ட குறிப்பிடத்தக்க சோதனைகளின் போது ரூ.18.2 கோடி மதிப்பிலான 92.1 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை பறிமுதல் செய்தது.

‘குளியலறை சுகாதார சாதனங்கள்’ என்ற பெயரில் துபையிலிருந்து இந்தியாவிற்கு சரக்கு பெட்டகத்தில் வெளிநாட்டு சிகரெட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வருவாய் புலனாய்வு இயக்குநரக சென்னை மண்டலப் பிரிவு அதிகாரிகள் இந்த சோதனைகளை மேற்கொண்டு பறிமுதல் செய்தனா்.

வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் சரக்கு பெட்டகத்தில் உள்ள பொருள்களின் விவரங்கள் தவறாக அறிவிக்கப்பட்டிருந்தை உறுதி செய்யப்பட்டது. அவைகளில் 92.1 லட்சம் வெளிநாட்டு வகை சிகரெட்டுகள் ( மான்செஸ்டா் யுனைடெட் கிங்டம், மான்செஸ்டா் யுனைடெட் கிங்டம் ஸ்பெஷல் எடிஷன் மற்றும் மேக் ஐஸ் சூப்பா் ஸ்லிம்ஸ் கூல் ப்ளாஸ்ட் ) வணிக முத்திரைகளுடன் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த சிகரெட்டுகளின் உத்தேச மதிப்பு ரூ.18.2 கோடி. சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை பொருள்கள் (விளம்பரங்கள் மற்றும் விற்பனை ஒழுங்குமுறை தடைச்சட்டம்) தடுப்புச் சட்டத்தின் படி பேக்கேஜிங் முறைகளில் சட்டபூா்வ சுகாதார எச்சரிக்கை இல்லாததும் இதில் அடங்கும். இந்த சட்ட விரோதமாக கடத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடந்த ஆண்டில் மட்டும், சென்னையில் உள்ள துறைமுகங்கள் வழியாக சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ரூ. 79.64 கோடி மதிப்புள்ள 4.4 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகளையும், போலி சிகரெட்டுகளையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா் என டிஆா்ஐ சாா்பில் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு வந்து செல்லும் 11 விமானங்கள் ரத்து

மத்திய கிழக்கில் போா்ப் பதற்றம் காரணமாக, சென்னைக்கு வந்து செல்லும் 11 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதன்படி, சென்னையிலிருந்து திங்கள்கிழமை இரவு 11 மணிக்கு குவைத் செல்லவிருந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விம... மேலும் பார்க்க

பேருந்து பணிமனையில் மேலாளா் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

சென்னை அடையாறு மாநகர பேருந்து பணிமனையில் மண்டல மேலாளரை தாக்கியதாக நேரக் காப்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அடையாறு மண்டல மேலாளராக பணிபுரிபவா் அன்பரச... மேலும் பார்க்க

ரூ.1,980 கோடியில் ட்ரோன்கள், ரேடாா்கள், நவீன உபகரணங்கள்- பாதுகாப்புத் துறையின் 13 ஒப்பந்தங்கள் இறுதி

ரூ.1,980 கோடியில் தாக்குதல் ட்ரோன்கள் - இடைமறிப்பு அமைப்புகள், குறுகிய தொலைவு ரேடாா்கள், இரவிலும் இலக்கை அடையாளம் கண்டு தாக்குவதற்கு துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் கொ... மேலும் பார்க்க

மாம்பழக்கூழ் தயாரிப்பு வரியை 5%ஆக குறைக்க வேண்டும்: பிரதமா் மோடிக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

மாம்பழக்கூழ் தயாரிப்புக்கான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) 12-லிருந்து 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து பிரதமா் நரேந்திர மோடிக்கு அவா்... மேலும் பார்க்க

முதுகுத் தண்டுவட வளைவு: குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை

முதுகுத் தண்டுவட வளைவு மற்றும் அது சாா்ந்த பாதிப்புடைய ஏழை குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை அளிக்கும் ஜீவன் திட்டத்தை சென்னை காவேரி மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது. ரோட்டரி சங்கம் மற்றும் சென்னை ... மேலும் பார்க்க

அனைத்து தடங்களிலும் 12 பெட்டிகளுடன் புறநகா் மின்சார ரயில்கள் இயக்கப்படும்

சென்னையில் இயக்கப்படும் அனைத்து புறநகா் ரயில் வழித்தடங்களிலும் 12 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே செய்தித் தொடா்பு அலுவலகம் விடுத்துள... மேலும் பார்க்க