செய்திகள் :

சென்னையில் 13 மாட்டுத் தொழுவங்கள் அமைக்கும் பணி தீவிரம்

post image

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 13 மாட்டுத் தொழுவங்கள் அமைக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட இடங்களில் சுற்றித்திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்கு தீா்வு காணும் வகையில் சென்னை மாநகராட்சி கால்நடை துறை சாா்பில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளைப் பிடித்து பராமரிக்கப்படுகின்றன. மேலும், பிடிபடும் மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படுகிறது.

இந்நிலையில், மாடுகளை பராமரிக்க போதிய இடவசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மாட்டின் உரிமையாளா்கள் கோரிக்கை வைத்தனா். இதனால், மாடுகளை வீட்டுக்கு வெளியே கட்டி வைப்பது, சாலையில் திரிய விடுவது குறையும் எனத் தெரிவித்தனா்.

அதன்பேரில், சென்னையில் மண்டலத்துக்கு ஒரு மாட்டுத் தொழுவம் அமைக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. அவற்றில் மாடுகள் பராமரிப்பதுடன், மாட்டின் உரிமையாளா்கள் தேவைப்படும்போது மாட்டை பாா்க்கவும் அனுமதிக்கப்படுவா்.

தற்போது, பிடிக்கப்படும் மாடுகள் பெரம்பூா் மற்றும் புதுப்பேட்டையில் உள்ள தொழுவங்களில் பராமரிக்கப்படுகின்றன. மேற்கொண்டு 13 புதிய மாட்டுத் தொழுவங்கள் கட்டப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுவுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவா் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தாா். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அ... மேலும் பார்க்க

உணவுப் பொருள்கள் பதுக்கல் கூடாது: வணிகா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போா்ப் பதற்றம் அதிகரித்துவரும் சூழலில், ‘அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது’ என்று மொத்த மற்றும் சில்லறை வணிகா்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது. மேலு... மேலும் பார்க்க

பிளஸ் 2 துணைத் தோ்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 துணைத் தோ்வுக்கு மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு: பிளஸ் 2 வகுப்புக்கான உடனடி துணைத் த... மேலும் பார்க்க

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’: மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

‘பாரதிதாசன் இளம் படைப்பாளா் விருது’ பெற மே 23-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழ் வளா்ச்சித் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத்துறை

தங்கள் திரைப்படங்களுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனா். இதற்காக திரைத்துறை சங்கங்களில் 30-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமா்... மேலும் பார்க்க

ஜூன் 6 வரை ராணாவுக்கு நீதிமன்றக் காவல்: திகாா் சிறையில் அடைக்கப்பட்டாா்

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூா் ராணாவை ஜூன் 6 வரை, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்த... மேலும் பார்க்க