செய்திகள் :

சென்னை: அண்ணா சாலையில் ஸ்பைடர் மேனாக வலம் வந்த சுவீட்ஸ் கடைக்காரர் - பிடித்துச் சென்ற போலீஸார்

post image

சென்னை அண்ணாசாலையில் ஸ்பைடர் மேன் உடையணிந்தவர், அவ்வழியாக சென்றவர்களிடம் படத்தில் வருவது போல் அங்கும் இங்கும் குதித்து காண்பித்தார். குழந்தைகளைப் பார்த்ததும் படத்தில் வரும் ஸ்பைடர் மேனாகவே அந்த நபர் மாறி அங்கும் இங்கும் துள்ளிக் குதித்தார். அதைப்பார்த்த குழந்தைகளும் பொதுமக்களும் அவரை கைதட்டி உற்சாகப்படுத்தினர். இதையடுத்து அந்த ஸ்படைர்மேன் உடையணிந்தவர், அண்ணாசாலையில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டல் பகுதிக்குச் சென்றார். அங்கு அந்த ஸ்பைடர்மேன் செய்த செய்கைகள், சேட்டைகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால் அண்ணாசாலையில் சேட்டைகளைச் செய்த இந்த ஸ்பைடர்மேனின் செய்கைகள் பிடிக்காமல் ஒரு தரப்பினர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அண்ணா சாலை

தகவல் கிடைத்ததும் திருவல்லிக்கேணி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்பைடர்மேன் உடையணிந்த நபரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது அவரின் பெயர் செய்யது அக்பர் அலி என்றும் ஹோட்டல் வளாகத்தில் சுவீட்ஸ் கடை நடத்தி வருவதும் தெரிந்தது. எதற்காக ஸ்பைடர்மேன் உடையணிந்தாய் என்று அவரிடம் விசாரித்தபோது, கடையில் வியாபாரம் சரியில்லை. அதனால் கடையின் விளம்பரத்துக்காக இப்படி செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை எச்சரித்த போலீஸார், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் தேவைப்பட்டால் விசாரணைக்கு வர வேண்டும் என எழுதி வாங்கிக் கொண்டு ஸ்பைடர்மேனான செய்யது அக்பர் அலியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Industrialist Murder: சொத்துப் பிரச்னை; தொழிலதிபர் தாத்தாவை 73 முறை குத்திக் கொன்ற பேரன்!

ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜனார்தன் ராவ். கடந்த வியாழக்கிழமை மாலை, ஜனார்தன் ராவின் உடல் ரத்தக்காயங்களுடன் அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இந்தக் கொலைக்குக் காரணமான அவரது பே... மேலும் பார்க்க

விசிக-வினர் மீது பழி சுமத்த நாடகமாடினாரா பெண் எஸ்.ஐ! - நடந்தது என்ன?

`விசிக மாவட்டச் செயலாளர் என்னைத் தாக்கினார்' என்று பெண் எஸ்.ஐ எழுப்பிய புகார் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 'அது முழுக்க தவறான தகவல்' என்று காவல்துறையே அறிவித்துள்ளது சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சிய... மேலும் பார்க்க

ஓசியாகக் கறிகொடுக்க மறுத்த கறிக்கடைக்காரர்; பிணத்துடன் வந்த வாடிக்கையாளர் - நடந்தது என்ன?

தேனி அருகே பழனிச்செட்டிப்பட்டியில் ஆட்டு இறைச்சிக் கடை நடத்தி வருபவர் மணியரசன். இவரது கடைக்கு அதேபகுதியைச் சேர்ந்த குமார் (40) என்பவர் கறி வாங்கச் சென்றுள்ளார். குமார் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ... மேலும் பார்க்க

ஏற்காடு: அரசு பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு... ஆசிரியர் போக்சோவில் கைது!

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில், கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அரசு விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நில... மேலும் பார்க்க

`நீங்கதான் ஹீரோயின்' - நடிக்க வைப்பதாகக் கூறி மோசடி; உத்தரகாண்ட் மாஜி முதல்வர் மகள் புகார்

உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்தவர் ரமேஷ் நிஷாங். இவர் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மகள் ஆருஷி நிஷாங்க்.நடிப்பில் ஆர்வம்கொண்ட... மேலும் பார்க்க

`பாதி விலைக்கு ஸ்கூட்டர்' - நம்பவைத்து ரூ.500 கோடி மோசடி; கிளப்... ஆடம்பர வாழ்க்கை... சிக்கிய நபர்!

கேரள மாநிலம், தொடுபுழாவைச் சேர்ந்தவர் அனந்து கிருஷ்ணன். பாதி விலைக்கு ஸ்கூட்டர்கள் வழங்க உள்ளதாகக் கூறி கேரளா முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்த வழக்கில் அனந்த கிருஷ்ணன் கைதுசெய்... மேலும் பார்க்க