செய்திகள் :

சென்னை: அண்ணா சாலையில் ஸ்பைடர் மேனாக வலம் வந்த சுவீட்ஸ் கடைக்காரர் - பிடித்துச் சென்ற போலீஸார்

post image

சென்னை அண்ணாசாலையில் ஸ்பைடர் மேன் உடையணிந்தவர், அவ்வழியாக சென்றவர்களிடம் படத்தில் வருவது போல் அங்கும் இங்கும் குதித்து காண்பித்தார். குழந்தைகளைப் பார்த்ததும் படத்தில் வரும் ஸ்பைடர் மேனாகவே அந்த நபர் மாறி அங்கும் இங்கும் துள்ளிக் குதித்தார். அதைப்பார்த்த குழந்தைகளும் பொதுமக்களும் அவரை கைதட்டி உற்சாகப்படுத்தினர். இதையடுத்து அந்த ஸ்படைர்மேன் உடையணிந்தவர், அண்ணாசாலையில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டல் பகுதிக்குச் சென்றார். அங்கு அந்த ஸ்பைடர்மேன் செய்த செய்கைகள், சேட்டைகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அதனால் அண்ணாசாலையில் சேட்டைகளைச் செய்த இந்த ஸ்பைடர்மேனின் செய்கைகள் பிடிக்காமல் ஒரு தரப்பினர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அண்ணா சாலை

தகவல் கிடைத்ததும் திருவல்லிக்கேணி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து ஸ்பைடர்மேன் உடையணிந்த நபரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது அவரின் பெயர் செய்யது அக்பர் அலி என்றும் ஹோட்டல் வளாகத்தில் சுவீட்ஸ் கடை நடத்தி வருவதும் தெரிந்தது. எதற்காக ஸ்பைடர்மேன் உடையணிந்தாய் என்று அவரிடம் விசாரித்தபோது, கடையில் வியாபாரம் சரியில்லை. அதனால் கடையின் விளம்பரத்துக்காக இப்படி செய்தேன் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை எச்சரித்த போலீஸார், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்றும் தேவைப்பட்டால் விசாரணைக்கு வர வேண்டும் என எழுதி வாங்கிக் கொண்டு ஸ்பைடர்மேனான செய்யது அக்பர் அலியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

போட்டோ எடுத்து மிரட்டி சிறுமியை பாலியல் கொடுமை செய்த இளைஞர் -போக்சோ வழக்கில் கைது!

தஞ்சாவூர் பூமால் ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன்(22). இவர் மளிகைக்கடை ஒன்றில் பொருள்கள் டோர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் 17 வயது சிறுமி ஒருவரை இவர் காதலித்ததாக சொல்லப்ப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; ரவுடிக்கு கை, கால் முறிவு -நடந்தது என்ன?

கடந்த 2-ம் தேதி இரவு 11.00 மணி, ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது 2 பெட்ரோல் குண்டுகளை இளைஞர்கள் சிலர் வீசிவிட்டு தப்பிஓடினர்.இரவு ரோந்துப் பணிக்கு காவலர்கள் சென்றுவிட்டதால் முதல் நிலைக் காவலர்... மேலும் பார்க்க

கூகுளில் ஹோட்டல் புக் செய்தபோது 93,000 ரூபாயை இழந்த இளம்பெண் - என்ன நடந்தது?

இன்றைய டிஜிட்டல் உலகில் ஆன்லைன் மோசடிகளால் பணத்தை இழப்பது மிகவும் எளிதாகிவிட்டது. சைபர் கிரைமில் ஈடுபடுபவர்கள் அசலை போன்று நகலை உருவாக்கி நம்ப வைத்து அதன்மூலம் பண மோசடி செய்கின்றனர்.அப்படித்தான் கூகுள... மேலும் பார்க்க

கிளம்பாக்கம்: இளம்பெண்ணுக்கு ஆட்டோவில் கூட்டுப் பாலியல் தொல்லை - லைவ் லோக்கேஷனால் தப்பித்தது எப்படி?

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பிப்ரவரி 3-ம் தேதி இரவு வடமாநிலத்தைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் அந்த இளம்பெண்ணிடம... மேலும் பார்க்க

`நாங்க காதலிக்கிறோம்’ - 17 வயது சிறுமியை கடத்திச்சென்று, வன்கொடுமை செய்ததாக இளம்பெண் கைது

மும்பை கொலாபா பகுதியை சேர்ந்த 17 வயது மைனர் பெண் கடந்த மாதம் திடீரென காணாமல் போய்விட்டார். அவர் கடந்த மாதம் 7ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.... மேலும் பார்க்க

நெல்லையில் திருடிய ஸ்கூட்டர்... கோவில்பட்டியில் மீட்பு; விருதுநகர் பெண் கைது!

Aநெல்லை மாவட்டம், தச்சநல்லூரைச் சேர்ந்தவர் குமார். இவர், அப்பகுதியில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று மதியம் வேலை முடிந்து சாப்பிடுவதற்காக குமார், தனது வீட்டி... மேலும் பார்க்க