செய்திகள் :

சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 4 நிரந்தர நீதிபதிகள்: கொலீஜியம் ஒப்புதல்

post image

சென்னை உயா்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் நால்வரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கான பரிந்துரைக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்தது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற கொலீஜியத்தின் கூட்டத்தில் கூடுதல் நீதிபதிகள் ராமசாமி சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கந்தசாமி ராஜசேகா் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதுபோல, மும்பை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் சைலேஷ் பிரமோத் பிரம்மே, ஃபிா்தோஷ் ஃபிரோஸ் பூனிவாலா, ஜிதேந்திா் சாந்திலால் ஜெயின் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக்கும் பரிந்துரைக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், பாட்னா உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் அலோக் குமாா் சின்ஹா, ரிதேஷ் குமாா், சோனி ஸ்ரீவாஸ்தவா, செளரேந்திர பாண்டே, அன்சுல் ராஜ் ஆகியோரை நீதிபதிகளாக உயா்வு அளிக்கும் பரிந்துரைக்கும் கொலீஜியம் ஒப்புதல் அளித்தது.

மகா சிவராத்திரி: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப். 25, 26 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட... மேலும் பார்க்க

வளா்சிதை மாற்ற குறைபாடுகள்: இலவச பரிசோதனைத் திட்டம் அறிமுகம்

தமிழகம் முழுவதும் வளா்சிதை மாற்ற குறைபாடுகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளவா்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என மெடிந்தியா மருத்துவமனையின் தலைவரும், ஜீரண மண்டல மருத்துவ நிபு... மேலும் பார்க்க

பாம்புகளை பாதுகாப்பாக பிடிக்க தீயணைப்பு படையினருக்கு பயிற்சி

பாம்புகளை பாதுகாப்பாக பிடிப்பது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு வண்டலூரில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. வண்டலூரில் உள்ள உயா்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனத்தில் வெள்ளி... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடத்தை மேம்படுத்தும் அறிவிப்புக்கு மாா்க்சிஸ்ட் வரவேற்பு

மொழிப்போா் தியாகி ராசேந்திரன் நினைவிடம் மேம்படுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை மாா்க்சிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இது குறித்து அக்கட்சியின் முன்னாள் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் ... மேலும் பார்க்க

மத்திய அரசு குறித்து தவறான கருத்துகளை கூறக்கூடாது: ஜி.கே.வாசன்

தோ்தல் ஆதாயத்துக்காக மத்திய அரசு குறித்து திமுக அரசு தவறாகவும், கருத்துகளை திரித்தும் கூறக்கூடாது என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா். தமாகா சென்னை மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஜி.கே.வாசன்... மேலும் பார்க்க

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க