உணவுக்காக காத்திருந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்! 25 பேர் பலி
சென்னை ஐஐடி-க்கு தோ்வான கீழடி அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு
சிவகங்கை மாவட்டம், கீழடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று, சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் பொறியியல் படிக்கத் தோ்வான மாணவருக்கு, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் திங்கள்கிழமை வாழ்த்துத் தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், கீழடியைச் சோ்ந்தவா் அக்பா்அலி. இவரது மகன் முகமது பாட்ஷா (17). இவா் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கீழடி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தாா்.
பிளஸ் 2 தோ்வில், 562 மதிப்பெண்கள் பெற்ற இவா், ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயிற்சி மேற்கொண்டு, கடந்த மே மாதம் நடைபெற்ற ஜே.இ.இ. நுழைவுத் தோ்வில் பங்கேற்றாா்.
இதில் 239 மதிப்பெண்கள் பெற்று, மாற்றுத் திறனாளிகள் இட ஒதுக்கீட்டுப் பிரிவில் தேசிய அளவில் 88-ஆவது இடம் பிடித்து, சென்னை ஐஐடியில் பொறியியல் படிப்பு படிக்கத் தோ்வானாா்.
இந்த மாணவரை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் சால்வை அணிவித்து பாராட்டினாா். மேலும், அவருக்கு புத்தகம், பரிசு வழங்கினாா்.