செய்திகள் :

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி!

post image

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி திவ்யா(30). ஆட்டோ ஓட்டுநரான தினேஷ் மீது ஏற்கெனவே ஒரு கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை தனது இரு குழந்தைகளுடன் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த திவ்யா திடீரென வியாசர்பாடி போலீஸார் தனது கணவர் தினேஷ் மீது பொய் வழக்குப் போடுவதாகக் கூறி பிளாஸ்க்கில் கொண்டுவந்த மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றிப் பற்றவைக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் தண்ணீர் ஊற்றி திவ்யாவை காப்பாற்றினர்.

இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் தினேஷ் மீது வியாசர்பாடி போலீஸார் பொய் வழக்கு போடுவதாகவும் அதற்குப் புகார் கொடுக்க எழுதப் படிக்க தெரியாது எனக் கூறவே உள்ளே அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும் வியாசர்பாடி காவல் நிலையத்தில் உள்ள இரண்டு காவலர்கள் வியாசர்பாடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் யார் யார் என எங்களுக்கு அடையாளம் காண்பிக்க வேண்டும். அப்படி இல்லையெனில் உன் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்து விடுவோம் என போலீஸார் மிரட்டி வருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதனை அடுத்து போலீஸார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடம் அருகே விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் பலி

பல்லடம் அருகே சாய ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி திங்கள்கிழமை (மே 19) உயிரிழந்தனர்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூரில் தனியாருக்குச் சொந்தான சாய ஆ... மேலும் பார்க்க

அரசு கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கை: 1.61 லட்சம் பேர் விண்ணப்பம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட்ட 13 நாள்களில் 1,61,324 மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.அரசு க... மேலும் பார்க்க

கேரளத்தில் மே 27ல் தென்மேற்குப் பருவமழை தொடங்கும்: வானிலை ஆய்வு மைய தலைவர்!

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 27ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அமுதா தெரிவித்தார். இதுதொடர்பாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் அம... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் க்யூஆர் கோடு மூலமாக மாணவர் சேர்க்கை: அமைச்சர் பாராட்டு

மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கல்வித் துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் ஒன்றிய... மேலும் பார்க்க

கோவை, நீலகிரியில் 2 நாள்களுக்கு மிக கனமழை: வானிலை மையம்

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிக கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு மத்தியில் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் வருகின்... மேலும் பார்க்க

சிவகிரி தம்பதி கொலை வழக்கில் 4 பேர் கைது: பல்லடம் கொலையிலும் 3 பேருக்கு தொடர்பு அம்பலம்!

சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை, தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். பிடிபட்ட குற்றவாளிகளுக்கு பல்லடம் அருகே நடந்த மூவர் கொலை சம்பவம் உள்ளிட்ட பல்வேறு வ... மேலும் பார்க்க