செய்திகள் :

சென்னை: தோழிக்காக சிறைக்குச் சென்ற ஆண் நண்பர் - ஊழியருக்கு ஆபாச பதிவு அனுப்பிய பின்னணி!

post image

சென்னை மதுரவாயல் சிவந்தி ஆதித்தனார் தெருவில் வசித்து வரும் பிரபு (41). இவர், சென்னை, அரும்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்த அலுவலகத்தின் பெயரில் போலியாக ஒரு இன்ஸ்டாகிராம் ஐடி தொடங்கப்பட்டு அதிலிருந்து பிரபுவுக்கும், அவருடன் வேலை பார்க்கும் பெண்கள் உட்பட சிலருக்கு ஆபாசமான மெசேஜ்கள் அனுப்பப்பட்டு வந்தன. அதனால் பிரபு உள்ளிட்டோர் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் சூழலில் ஆபாசமான பதிவுகளை நீக்க வேண்டும் என்றால் 10 லட்சம் ரூபாயை கிரிப்போ வாலட்டில் முதலீடு செய்ய வேண்டும் எனவும் அந்த ஐடியிலிருந்து மெசேஜ் அனுப்பப்பட்டது. இதையடுத்து போலி ஐடி மூலம் ஆபாச பதிவுகளை அனுப்பியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரபு, சென்னை பெருநகர காவல், மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் (IT Act) ஆகிய பிரிவுகளில் சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Instagram
இன்ஸ்டாகிராம் (Instagram)

விசாரணையில் போலி இன்ஸ்டாகிராம் ஐடி உருவாக்கி புகார்தாரரையும் மற்ற ஊழியர்களையும் ஆபாச செய்திகள் பதிவிட்டு பணம் கேட்டு மிரட்டியது மதுரவாயல், எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்த வெங்கடேஷ், (25) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து குற்றச் செயலுக்குப் பயன்படுத்தி ஐபோனையும் பறிமுதல் செய்தனர். வெங்கடேஷிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில், இவரின் தோழி ஒருவர், அரும்பாக்கம் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேருவதற்காக 3 லட்சம் ரூபாய் முன்பணம் செலுத்தியிருக்கிறார். ஆனால் தோழிக்கு வேலையும் கொடுக்காமல், முன்பணத்தையும் திரும்ப தராமல் அங்கு வேலைப்பார்த்து வரும் பிரபு உள்பட சில ஊழியர்கள் அலைக்கழித்ததோடு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறார்கள். பின்னர் முன்பணம் 3 லட்சம் ரூபாயை நீண்ட நெடிய போராட்டத்துக்குப்பிறகு வெங்கடேஷின் தோழி திரும்ப பெற்றியிருக்கிறார். இந்தத் தகவலை வெங்கடேஷிடம் அவரின் தோழி கூறியிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், தன்னுடைய தோழிக்காக பிரபு உள்ளிட்டோருக்கு போலி இன்ஸ்டாகிராம் ஜடி மூலம் ஆபாச பதிவுகளை தொடர்ந்து அனுப்பி பழிவாங்கி வந்திருப்பது தெரியவந்தது.

வங்க மொழியில் பேசிய கொல்கத்தா மாணவர்கள்; `பங்களாதேஷ் பிரஜைகள்' எனக் கூறி தாக்கிய வியாபாரிகள்!

சமீப காலமாக பங்களாதேஷ் பிரஜைகளுக்கு எதிராக சில மாநிலங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மும்பை போன்ற நகரங்களில் திடீரென ரெய்டு நடத்தி பங்களாதேஷ் பிரஜைகளை கைது செய்து நாடு கடத்தும் சம்பவங்களும் ந... மேலும் பார்க்க

உத்தரகாண்ட்: ஹோம்வெர்க் செய்யாததால் அடித்த ஆசிரியர்; கோவத்தில் துப்பாக்கியால் சுட்ட மாணவன்

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் 9வது வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன்னை வகுப்பறையில் அடித்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டுள்ளான். அங்குள்ள குருநானக் பள்ளியில் அந்த மாணவன் 9வது... மேலும் பார்க்க

NIA RAID: திண்டுக்கல்லில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை; ஒருவர் கைது - என்ன காரணம்?

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் பாமகவை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு முக்கிய காரணமாக மதமாற்றம் செய்வதை ராமலிங்கம... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை - வடமாநில இளைஞரின் வக்கிரச் செயல்!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி அந்தப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி, தனியாக பள்ளிக்கு நடந்துச் சென்றார். அப்போது வடமாநில ... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: காதலை ஏற்க மறுப்பு; ஆசிரியையை மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்த மாணவர்; என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள கொட்வாலி என்ற கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மாணவன், அங்குள்ள பள்ளியில் 12வது வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிய ஒருவரை... மேலும் பார்க்க

சென்னை: NRE Account-ல் ரூ.1,43,25,000 மோசடி - தம்பதிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கி அதிகாரிகள்!

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அர்ஜுன் பாண்டியன். இவரின் உறவினர் தீனதயாளன் தினகர் பாண்டியன், அவரின் மனைவி சித்ரா. இவர்களின் பொது அதிகாரத்தின் அடிப்படையில் அர்ஜூன் பாண்டியன், 01.07.2025 -ம் தேதி சென்னை பெர... மேலும் பார்க்க