செய்திகள் :

மத்தியப் பிரதேசம்: காதலை ஏற்க மறுப்பு; ஆசிரியையை மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்த மாணவர்; என்ன நடந்தது?

post image

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள கொட்வாலி என்ற கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மாணவன், அங்குள்ள பள்ளியில் 12வது வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிய ஒருவரை அவன் ஒரு தலைப்பட்சமாகக் காதலித்து வந்தார்.

ஆசிரியைக்கு 26 வயதாகிறது. மாணவனின் காதலை அந்த ஆசிரியை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனாலும் அவன் தொடர்ந்து ஆசிரியையைப் பின் தொடர்ந்து வந்தார். ஆசிரியையின் புகாரைத் தொடர்ந்து அவன் அப்பள்ளியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அம்மாணவன் வேறு ஒரு பள்ளியில் சேர்ந்து படித்து வந்தான்.

இந்நிலையில் சுதந்திரத்தினத்தன்று சம்பந்தப்பட்ட ஆசிரியை சேலை அணிந்து வந்தார். அது குறித்து அவன் ஏதோ ஆட்சேபகரமாக விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆசிரியை இது குறித்து புகார் செய்திருந்தார். அதனால் அம்மாணவன் ஆசிரியை மீது கடும் கோபமடைந்தார்.

ஆசிரியையைப் பழி வாங்க வேண்டும் என்று நினைத்த அவன் நேராக ஆசிரியை வீட்டிற்குச் சென்றார். செல்லும்போது தன்னுடன் பாட்டிலில் பெட்ரோல் எடுத்துச் சென்றார். ஆசிரியை வீட்டிற்குச் சென்றதும் அவர் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்துவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.

பக்கத்திலிருந்தவர்கள் தீயை அணைத்து ஆசிரியையை மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் 15 சதவீதம் அளவுக்குத் தீக்காயம் அடைந்துள்ளார். மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தப்பியோடிய மாணவனை போலீஸார் விரைந்து செயல்பட்டு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவனுக்கு ஆசிரியையைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தெரியும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

காஞ்சிபுரம்: பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை - வடமாநில இளைஞரின் வக்கிரச் செயல்!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி அந்தப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி, தனியாக பள்ளிக்கு நடந்துச் சென்றார். அப்போது வடமாநில ... மேலும் பார்க்க

சென்னை: NRE Account-ல் ரூ.1,43,25,000 மோசடி - தம்பதிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கி அதிகாரிகள்!

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அர்ஜுன் பாண்டியன். இவரின் உறவினர் தீனதயாளன் தினகர் பாண்டியன், அவரின் மனைவி சித்ரா. இவர்களின் பொது அதிகாரத்தின் அடிப்படையில் அர்ஜூன் பாண்டியன், 01.07.2025 -ம் தேதி சென்னை பெர... மேலும் பார்க்க

காதல் திருமணம்: கணவரிடம் இருந்து பிரிக்க மாந்திரீக பூஜை -பெண்ணைக் கடத்திய பெற்றோர் உட்பட 6 பேர் கைது

நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டை அடுத்த தேவனாம்பாளையத்தைச் சேர்ந்த விஜய் (22) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்பவரும் காதலித்து கடந்த ஜூன் மாதம், திருமணம் செய்து... மேலும் பார்க்க

Delhi CM: டெல்லி முதல்வர் ரேகாவை தாக்கிய குஜராத் இளைஞர் கைது; நடந்த சம்பவத்திற்கு காரணம் என்ன?

டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று காலையில் தனது வீட்டில் வாராந்திர மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். அந்நேரம் அங்கு வந்த ஒருவர் முதல்வர்... மேலும் பார்க்க

``அப்பாகூட கடவுளை பார்க்க போறோம்'' - தந்தையுடன் உயிரை மாய்த்த குழந்தைகள்; கடலூரில் நடந்த சோகம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜகுரு, சுகன்யா தம்பதியினர்.இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் இருந்தனர். கடந்த மாதம் கணவன் மனைவிக்கு... மேலும் பார்க்க

NIA Raid: திண்டுக்கல்லில் 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை; காரணம் என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தில், பாமகவை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மத மாற்றம் செய்வதை கண்டித்ததற்காக ராமலிங்கம் கொலை செய்யபட்டதா... மேலும் பார்க்க