செய்திகள் :

சென்னை: NRE Account-ல் ரூ.1,43,25,000 மோசடி - தம்பதிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கி அதிகாரிகள்!

post image

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அர்ஜுன் பாண்டியன். இவரின் உறவினர் தீனதயாளன் தினகர் பாண்டியன், அவரின் மனைவி சித்ரா. இவர்களின் பொது அதிகாரத்தின் அடிப்படையில் அர்ஜூன் பாண்டியன், 01.07.2025 -ம் தேதி சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், `தீனதயாளன் தினகர் பாண்டியன், அவரின் மனைவி சித்ரா ஆகியோர், அண்ணாநகரில் செயல்படும் வங்கி ஒன்றில் Joint NRO Account வைத்திருக்கிறார்கள். அதே வங்கியில் தீனதயாளன் பெயரில் ஒரு NRE Account-ம் மனைவி சித்ரா பெயரில் ஒரு NRE Account-ம் உள்ளன. இந்த மூன்று வங்கி கணக்குகளிலிருந்து தீனதயாளன், சித்ரா ஆகியோரின் அனுமதியின்றி 06.06.2015-ம் தேதி முதல் 06.09.2020-ம் தேதி வரை காசோலை மற்றும் Vouchers-கள் மூலம் 1,43,25,000 ரூபாய் எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், பணத்தையும் மீட்டுக் கொடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சென்னை மத்தியகுற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவினர் விசாரணையை தொடங்கினர்.

வேணுகோபால்

போலீஸார் நடத்திய விசாரணையில் அமெரிக்காவில் வசித்து வருகின்ற தீனதயாளன் தினகர் பாண்டியன், சித்ரா தம்பதியின் வங்கி காசோலையில் போலியான கையொப்பமிட்டு, வங்கி அலுவர்களால் மோசடி நடந்திருப்பது செய்தது தெரியவந்தது. மேலும் Fixed deposit -ல் வைத்திருக்கும் பணத்தையும் முறைகேடு செய்து எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அதுதொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் வங்கியில் கேஷியராக வேலை செய்து வரும் குலோத்துங்கன் (49), தனசேகரன் (41), துணை மேலாளராக பணியாற்றிய வேணுகோபால் (50) ஆகிய மூன்று பேரும் இந்த பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

குலோத்துங்கன்

இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இவர்கள் வாடிக்கையாளர்களின் பணம் சுமார் 8 கோடி ரூபாயை ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் சிறையில் அடைத்தனர்.

மத்தியப் பிரதேசம்: காதலை ஏற்க மறுப்பு; ஆசிரியையை மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்த மாணவர்; என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள கொட்வாலி என்ற கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மாணவன், அங்குள்ள பள்ளியில் 12வது வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிய ஒருவரை... மேலும் பார்க்க

காதல் திருமணம்: கணவரிடம் இருந்து பிரிக்க மாந்திரீக பூஜை -பெண்ணைக் கடத்திய பெற்றோர் உட்பட 6 பேர் கைது

நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டை அடுத்த தேவனாம்பாளையத்தைச் சேர்ந்த விஜய் (22) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்பவரும் காதலித்து கடந்த ஜூன் மாதம், திருமணம் செய்து... மேலும் பார்க்க

Delhi CM: டெல்லி முதல்வர் ரேகாவை தாக்கிய குஜராத் இளைஞர் கைது; நடந்த சம்பவத்திற்கு காரணம் என்ன?

டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று காலையில் தனது வீட்டில் வாராந்திர மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். அந்நேரம் அங்கு வந்த ஒருவர் முதல்வர்... மேலும் பார்க்க

``அப்பாகூட கடவுளை பார்க்க போறோம்'' - தந்தையுடன் உயிரை மாய்த்த குழந்தைகள்; கடலூரில் நடந்த சோகம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜகுரு, சுகன்யா தம்பதியினர்.இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் இருந்தனர். கடந்த மாதம் கணவன் மனைவிக்கு... மேலும் பார்க்க

NIA Raid: திண்டுக்கல்லில் 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை; காரணம் என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தில், பாமகவை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மத மாற்றம் செய்வதை கண்டித்ததற்காக ராமலிங்கம் கொலை செய்யபட்டதா... மேலும் பார்க்க

நாமக்கல்: கிட்னி விற்பனையைத் தொடர்ந்து கல்லீரல் விற்பனை; பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த அதிர்ச்சி தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோதமாக கிட்னி விற்பனையைத் தொடர்ந்து கல்லீரல் விற்பனை நடந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அலமேடு பகுதியைச் சேர்ந்தவர் தேவி. இவரது கணவர் பிரிந்து சென்ற நிலையில், 18 வ... மேலும் பார்க்க