செய்திகள் :

கூலிக்கு யு/ஏ சான்றிதழ் கோரிய வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

post image

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ’ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக்கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில், தணிக்கை வாரியம் பதிலளிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ’ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சன் நெட்வொர்க் சாா்பில் எம்.ஜோதிபாசு என்பவர் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனத்தின் ஒரு பிரிவான சன் பிக்சா்ஸ் சாா்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கூலி’ திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்துக்கு தணிக்கை வாரியம் ’ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால், 18 வயதுக்கு குறைவான சிறார்கள் இத்திரைப்படத்தைக் காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

‘கூலி’ திரைப்படத்தை விட கேஜிஎஃப் உள்ளிட்ட பிற திரைப்படங்களில் வன்முறைக் காட்சிகள் அதிகமாகவே உள்ளன. ஆனால், அந்தப் படங்களுக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ‘ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் அனுமதி வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி நீதிபதி டி.தமிழ்ச்செல்வி முன், மூத்த வழக்குரைஞர் ஜெ.ரவீந்திரன் முறையிட்டார்.

இதையடுத்து, இந்த வழக்கு நீதிபதி டி.தமிழ்ச்செல்வி முன் விசாரணக்கு வந்தது. அப்போது, தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், படத்தில் உள்ள சில வன்முறைக் காட்சிகளை நீக்கினால் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கிறோம் என்று தெரிவித்தபோது, அதனை ஏற்றுக் கொண்டு, தற்போது வழக்கு தொடுத்துள்ளதாகவும், மனுவுக்கு பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி , மனுவுக்கு பதிலளிக்கும்படிதணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆக. 25-க்கு உத்தரவிட்டார்.

இதையும் படிக்க: சத்தீஸ்கரில் ஒரே நாளில் 21 நக்சல்கள் சரண்!

Regarding the order issued by the court in the case of seeking U/A certificate for coolie movie.

மக்களாட்சியின் வேரிலேயே வெந்நீர் ஊற்றும் செயல்: பதவிநீக்க மசோதா குறித்து முதல்வர்!

முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளிடோரை பதவியில் இருந்து நீக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதமர... மேலும் பார்க்க

சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீதித்துறையை விமர்சித்த புகாரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாம் தமிழர் கட்சியின்... மேலும் பார்க்க

மதுரையில் சட்டவிரோத பதாகைகளை 1 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு!

மதுரையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பதாகைகளை 1 மணி நேரத்தில் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.மதுரையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள், பதாக... மேலும் பார்க்க

தவெக மாநாடு: தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழக வெற்றிக் கழகத்தில் 2-வது மாநில மாநாடு மதுரையில் நடைபெறுவதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநாடு, வாகை சூடும் வரலாறு திரும்புகிறது “வெற்றி... மேலும் பார்க்க

தவெக மாநாடு: 100 அடி கொடிக் கம்பம் சாய்ந்து கார் சேதம்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரையில் நாளை(ஆக.20) நடைபெறும் 2-வது மாநில மாநாட்டுக்காக நட முயன்ற 100 அடி உயர கொடி மரம் கார் மேலே விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.2026 ஆம் ஆண்டு பேரவைத்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களைக் கணக்கெடுக்க முடிவு!

தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் இருந்து குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு புலம்... மேலும் பார்க்க