செய்திகள் :

காஞ்சிபுரம்: பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை - வடமாநில இளைஞரின் வக்கிரச் செயல்!

post image

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி அந்தப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி, தனியாக பள்ளிக்கு நடந்துச் சென்றார். அப்போது வடமாநில இளைஞர் ஒருவர், மாணவியை பின்தொடர்ந்து வந்திருக்கிறார். ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் மாணவியின் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார் இளைஞர். அதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, அந்த இளைஞரிடம் ஏன் என் கையைப் பிடிக்கிறீர்கள்? என வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதோடு ஹெல்ப் என்று மாணவி சத்தம் போட்டிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த இளைஞர், மாணவியை சரமாரியாக தாக்கியதோடு அவரை அருகில் உள்ள முட்புதருக்கு தூக்கிச் சென்றிருக்கிறார். பின்னர் மாணவிக்கு சொல்ல முடியாத வகையில் பாலியல் தொல்லைகளை கொடுத்திருக்கிறார் அந்த இளைஞர்.

சாகித்

இந்தச் சமயத்தில் இளைஞருடன் போராடிய மாணவி அவரிடமிருந்து தப்பி ஓடி வந்திருக்கிறார். அதன் பிறகு பள்ளிக்குச் சென்ற மாணவி ஒருவித பதற்றத்துடன் காணப்பட்டிருக்கிறார். அப்போது மாணவியின் நடவடிக்கைகளில் மாற்றத்தைக் கண்டுபிடித்த பள்ளி ஆசிரியை, மாணவியை தனியாக அழைத்து விசாரித்திருக்கிறார். விசாரணையில் மாணவி, தனக்கு நடந்த கொடுமைகளை கண்ணீர்மல்க ஆசிரியையிடம் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு விவரம் தெரிவிக்கப்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த மாணவியின் குடும்பத்தினரும் கிராம மக்களும் பள்ளிக்கு திரண்டு வந்தனர். பின்னர் மாணவியிடம் விவரங்களை கேட்டறிந்தவர்கள் அந்தப் பகுதியில் தீவிரமாக தேடினர். மாணவி அளித்த தகவலின்படி அந்தப் பகுதியில் நடந்து வரும் கட்டுமான பணிகளில் வடமாநில இளைஞர் ஒருவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அவரின் போட்டோவை மாணவியிடம் காண்பித்தபோது இவன்தான் என்னை பேட் டச் செய்தான் என்பதை அவர் உறுதிப்படுத்தினார். அதைக்கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்ற சிலர், வடமாநில இளைஞரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அந்த வடமாநில இளைஞரை ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரிடம் விசாரித்த போது அவரின் பெயர் சாகித் (35) என்றும் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து சாகித்தை கைது செய்த போலீஸார் அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக பெண்கள், மாணவிகளுக்கு வடமாநில இளைஞர்களால் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. இதை தடுக்க காவல்துறை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அல்லது தண்டனைகளை கடுமையாக்க வேண்டும் என சமூகநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மத்தியப் பிரதேசம்: காதலை ஏற்க மறுப்பு; ஆசிரியையை மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்த மாணவர்; என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள கொட்வாலி என்ற கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மாணவன், அங்குள்ள பள்ளியில் 12வது வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிய ஒருவரை... மேலும் பார்க்க

சென்னை: NRE Account-ல் ரூ.1,43,25,000 மோசடி - தம்பதிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கி அதிகாரிகள்!

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அர்ஜுன் பாண்டியன். இவரின் உறவினர் தீனதயாளன் தினகர் பாண்டியன், அவரின் மனைவி சித்ரா. இவர்களின் பொது அதிகாரத்தின் அடிப்படையில் அர்ஜூன் பாண்டியன், 01.07.2025 -ம் தேதி சென்னை பெர... மேலும் பார்க்க

காதல் திருமணம்: கணவரிடம் இருந்து பிரிக்க மாந்திரீக பூஜை -பெண்ணைக் கடத்திய பெற்றோர் உட்பட 6 பேர் கைது

நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டை அடுத்த தேவனாம்பாளையத்தைச் சேர்ந்த விஜய் (22) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்பவரும் காதலித்து கடந்த ஜூன் மாதம், திருமணம் செய்து... மேலும் பார்க்க

Delhi CM: டெல்லி முதல்வர் ரேகாவை தாக்கிய குஜராத் இளைஞர் கைது; நடந்த சம்பவத்திற்கு காரணம் என்ன?

டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று காலையில் தனது வீட்டில் வாராந்திர மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். அந்நேரம் அங்கு வந்த ஒருவர் முதல்வர்... மேலும் பார்க்க

``அப்பாகூட கடவுளை பார்க்க போறோம்'' - தந்தையுடன் உயிரை மாய்த்த குழந்தைகள்; கடலூரில் நடந்த சோகம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த காட்டாண்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜகுரு, சுகன்யா தம்பதியினர்.இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும், 7 வயதில் ஒரு மகளும் இருந்தனர். கடந்த மாதம் கணவன் மனைவிக்கு... மேலும் பார்க்க

NIA Raid: திண்டுக்கல்லில் 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை; காரணம் என்ன?

தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தில், பாமகவை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மத மாற்றம் செய்வதை கண்டித்ததற்காக ராமலிங்கம் கொலை செய்யபட்டதா... மேலும் பார்க்க