செய்திகள் :

Online Gaming Bill: எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் ஆன்லைன் கேமிங் மசோதா! - விவரம் என்ன?

post image

மழைக்கால கூட்டத்தொடர் தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது. நாளையுடன் (21-ம் தேதி) கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதற்கு மத்தியில், ஆன்லைன் கேமிங்கைத் தடைசெய்து ஒழுங்குபடுத்தும் மசோதாவை மக்களவையில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிமுகப்படுத்தினார்.

ஏற்கெனவே தமிழ்நாடு, ஹரியானா, தெலங்கானா, நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட பல மாநிலங்கள் ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்தும் விதமாக தனித்தனிச் சட்டங்கள் உள்ள நிலையில், மத்திய அரசு ஒரே சட்டமாக கொண்டு வர இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆன்லைன் சூதாட்டம்
ஆன்லைன் சூதாட்டம்

இந்த மசோதா இ-ஸ்போர்ட்ஸ், கல்வி மற்றும் சமூக விளையாட்டுகளை ஊக்குவித்து ஒழுங்குபடுத்துகிறது. ஆன்லைன் சூதாக இருக்கும் பணவிளையாட்டுகள் அதன் விளம்பரங்களைத் தடைசெய்கிறது.

மேலும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கும், அதை விளம்பரப்படுத்துபவர்களுக்கும் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க பரிந்துரைக்கிறது.

இந்த மசோதா இளைஞர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை சமூக–பொருளாதார பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டது என மத்திய பா.ஜ.க அரசு தெரிவித்திருக்கிறது.

இந்த மசோதா அறிமுகப்படுத்தப் பிறகு, சபாநாயகர் மசோதா குறித்த கருத்துக்களை தெரிவிக்குமாறு காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரியிடம் கேட்டுக் கொண்டார்.

ஆனால், 'பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பணி' குறித்து சபை முதலில் விவாதம் நடத்தியப் பிறகே மற்றவை குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

‘வாட்ஸ்அப்’ மூலம் 50 சேவைகள்; மெட்டா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த தமிழக அரசு!

அரசின் 50க்கும் மேற்பட்ட சேவைகளை வாட்ஸ்அப் மூலம் மக்கள் எளிதாக பெறுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக, மெட்டா நிறுவனத்துடன் தகவல் தொழில்நுட்பத் துறை புரிந்து... மேலும் பார்க்க

`30 நாள்கள் சிறையில் இருந்தால் பதவி பறிப்பு' -அமித்ஷா மசோதா தாக்கல்; எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மக்களவையில் மூன்று முக்கிய மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஆகஸ்ட் 21) தாக்கல் செய்கிறார்.நாடாளுமன்றம்அதன்படி... மேலும் பார்க்க

"முதலமைச்சர்கள் பதவியை பறிக்கும் மசோதா" - அமித் ஷாவின் மசோதாவுக்கு CPI (M) கண்டனம்!

மத்திய உள்துறை அமைச்சர் இன்று தாக்கல் செய்துள்ள 130வது அரசமைப்பு திருத்த மசோதாவின் படி, 5 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை கிடைக்கும் படியான கடுமையான குற்றச்சாட்டுகளில் கைதாகி, 30 நாட்களுக்கும் மேல் பிணையி... மேலும் பார்க்க

`தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் கடைசி நாளில்.!’ - காவல்நிலையத் தாக்குதல் குறித்து நிலவுமொழி

சென்னை ரிப்பன் மாளிகைக்கு முன்பு நடந்த தூய்மைப் பணியாளர் போராட்டத்தின் போது, சமூக செயற்பாட்டாளர்கள் வளர்மதியும், நிலவுமொழியும் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது கடுமையாக... மேலும் பார்க்க

TVK: சரிந்து விழுந்த 100 அடி கொடிக்கம்பம்; நொறுங்கிய கார் - தவெக மாநாட்டு திடலில் திடீர் விபத்து

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக மாநாட்டுக்கான தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.மாநாடு நடைபெறும் பாரபத்தி திடலுக்கு வெளியே ... மேலும் பார்க்க