செய்திகள் :

"முதலமைச்சர்கள் பதவியை பறிக்கும் மசோதா" - அமித் ஷாவின் மசோதாவுக்கு CPI (M) கண்டனம்!

post image

மத்திய உள்துறை அமைச்சர் இன்று தாக்கல் செய்துள்ள 130வது அரசமைப்பு திருத்த மசோதாவின் படி, 5 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை கிடைக்கும் படியான கடுமையான குற்றச்சாட்டுகளில் கைதாகி, 30 நாட்களுக்கும் மேல் பிணையில் வராமல் காவலில் இருந்தால் பிரதமர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் பதவியை நீக்க முடியும். கைதாகும் தலைவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாவிட்டாலும் அவரது பதவி பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மசோதாக்கள் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.

130வது அரசியலமைப்பு திருத்த மசோதா
130வது அரசியலமைப்பு திருத்த மசோதா
130வது அரசியலமைப்பு திருத்த மசோதா
130வது அரசியலமைப்பு திருத்த மசோதா
130வது அரசியலமைப்பு திருத்த மசோதா

அந்த வகையில் அமித் ஷா அறிமுகப்படுத்திய மசோதாவுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

CPI (M) அறிக்கை

ஜனநாயக விரோத மசோதாக்களுக்கு சி.பி.ஐ (எம்) கண்டனம் தெரிவிக்கிறது என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்சிஸ்ட்) அரசியல் குழு 30 நாட்கள் காவலில் இருந்தால் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களின் பதவியை பறிக்கும் வகையிலான மோதாவை கண்டிக்கிறது. இது மோடி அரசாங்கத்தின் நிறுவப்பட்ட சட்ட நடைமுறைகளை மீறிச் செயல்படும் ஜனநாயக விரோத போக்கை காட்டுகிறது.

கொடூரமான குற்றங்கள் எனத் தனிமைப்படுத்தி, நீதித்துறை விசாரணை தவிர்த்து செயல்படுவதற்கான ஒருமுழுமையான சட்டத்தை உருவாக்க கடந்த காலங்களிலும் பாஜக முயன்றுள்ளது.

CPI (M) அறிக்கை
CPI (M) அறிக்கை

தற்போதைய அரசின் நவ-பாசிச போக்குகளைக் காணும்போது, இது எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளை குறிவைப்பதற்கான ஆயுதமாக பயன்படுத்தப்படும் என்பதை கண்கூடாக அறியமுடிகிறது.

இது அருவருப்பானது மட்டுமல்லாமல் ஜனநாயகத்துக்கான அடிப்படை காரணிகள் மற்றும் சமநிலையை குறைமதிப்புக்கு உட்படுத்துவத்துவதாகும். இதில் குற்றத்தைக் குறிப்பிடுவது அரசின் உண்மையான நோக்கத்தை மறைப்பதற்கான திரை மட்டுமே.

இந்த சட்டத்தை எதிர்த்து முழு பலத்துடன் போராட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதிபூண்டுள்ளது. மேலும் எதிர்க் கட்சிகளாக இருக்கும் அனைத்து ஒத்த கருத்துடைய ஜனநாயக மற்றும் மத சார்பற்றக் கட்சிகளும் இந்த தேவையற்ற நடவடிக்கையை கூட்டாக எதிர்க்க வேண்டும் என வலுயுறுத்துகிறது." எனக் கூறப்பட்டுள்ளது.

Online Gaming Bill: எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் ஆன்லைன் கேமிங் மசோதா! - விவரம் என்ன?

மழைக்கால கூட்டத்தொடர் தற்போது இறுதி வாரத்தை எட்டியுள்ளது. நாளையுடன் (21-ம் தேதி) கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில், பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த... மேலும் பார்க்க

`30 நாள்கள் சிறையில் இருந்தால் பதவி பறிப்பு' -அமித்ஷா மசோதா தாக்கல்; எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மக்களவையில் மூன்று முக்கிய மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (ஆகஸ்ட் 21) தாக்கல் செய்கிறார்.நாடாளுமன்றம்அதன்படி... மேலும் பார்க்க

`தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் கடைசி நாளில்.!’ - காவல்நிலையத் தாக்குதல் குறித்து நிலவுமொழி

சென்னை ரிப்பன் மாளிகைக்கு முன்பு நடந்த தூய்மைப் பணியாளர் போராட்டத்தின் போது, சமூக செயற்பாட்டாளர்கள் வளர்மதியும், நிலவுமொழியும் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். அப்போது கடுமையாக... மேலும் பார்க்க

TVK: சரிந்து விழுந்த 100 அடி கொடிக்கம்பம்; நொறுங்கிய கார் - தவெக மாநாட்டு திடலில் திடீர் விபத்து

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மாநில மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், கடந்த ஒரு வார காலமாக மாநாட்டுக்கான தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.மாநாடு நடைபெறும் பாரபத்தி திடலுக்கு வெளியே ... மேலும் பார்க்க

1967 - 1977 - 2026: `அண்ணா, எம்.ஜி.ஆர் வழியில் விஜய்' - முன் நிற்கும் அந்த 3 சவால்கள்!

மதுரையில் த.வெ.க-வின் இரண்டாவது மாநில மாநாட்டை நடத்தவிருக்கிறார் விஜய். மாநாட்டு மேடையின் உச்சியில் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரோடு விஜய் இருப்பதைப் போல 'வரலாறு திரும்புகிறது' என்ற பெயரில் ஒரு கட் அவுட்டு... மேலும் பார்க்க