செய்திகள் :

உத்தரகாண்ட்: ஹோம்வெர்க் செய்யாததால் அடித்த ஆசிரியர்; கோவத்தில் துப்பாக்கியால் சுட்ட மாணவன்

post image

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் 9வது வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தன்னை வகுப்பறையில் அடித்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டுள்ளான். அங்குள்ள குருநானக் பள்ளியில் அந்த மாணவன் 9வது வகுப்பு படித்து வருகிறான்.

அம்மாணவனை இயற்பியல் ஆசிரியர் ககன்தீப் வகுப்பறையில் அடித்ததாகக் கூறப்படுகிறது. ஆசிரியர் கேட்ட கேள்விக்கு மாணவன் சரியாகப் பதிலளிக்காத காரணத்தால் அவனை அடித்ததோடு மாணவர்கள் மத்தியில் ஆசிரியர் திட்டி இருக்கிறார். அதோடு மாணவன் ஹோம்ஒர்க் செய்யாமல் வந்துள்ளான்.

ஆசிரியர் அடித்துத் திட்டியதால் அவரைப் பழிவாங்க முடிவு செய்த மாணவன் அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்தான். நேற்று ஆசிரியர் ககன்தீப் சம்பந்தப்பட்ட மாணவன் படிக்கும் வகுப்பறையில் பாடம் நடத்தி முடித்துவிட்டு வகுப்பறையை விட்டு வெளியேறினார். அவர் வெளியில் சென்றபோது மாணவன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து ஆசிரியரைச் சுட்டான். தோட்டா ஆசிரியரின் தோள்பட்டையில் பாய்ந்தது. துப்பாக்கியால் சுட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து மாணவன் தப்பி ஓடிவிட்டான்.

உடனே ஆசிரியர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, அவருக்குச் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மாணவன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து தங்களது காவலில் எடுத்துள்ளனர். மாணவனிடம் விசாரித்தபோது துப்பாக்கியைத் தனது டிபன்பாக்ஸில் மறைத்து எடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளான்.

இச்சம்பவத்தால் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உத்தரகாண்டில் உள்ள உத்தம்சிங் நகர்ப் பகுதி சி.பி.எஸ்.சி பள்ளிகள் மற்றும் தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள் இன்று போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அவர்கள் காசிப்பூரில் மிகப்பெரிய அமைதிப்பேரணி ஒன்றையும் இன்றைக்கு நடத்தினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

NIA RAID: திண்டுக்கல்லில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை; ஒருவர் கைது - என்ன காரணம்?

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் பாமகவை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு முக்கிய காரணமாக மதமாற்றம் செய்வதை ராமலிங்கம... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை - வடமாநில இளைஞரின் வக்கிரச் செயல்!

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி அந்தப்பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று மாணவி, தனியாக பள்ளிக்கு நடந்துச் சென்றார். அப்போது வடமாநில ... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: காதலை ஏற்க மறுப்பு; ஆசிரியையை மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்த மாணவர்; என்ன நடந்தது?

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டத்தில் உள்ள கொட்வாலி என்ற கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மாணவன், அங்குள்ள பள்ளியில் 12வது வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றிய ஒருவரை... மேலும் பார்க்க

சென்னை: NRE Account-ல் ரூ.1,43,25,000 மோசடி - தம்பதிக்கு அதிர்ச்சி கொடுத்த வங்கி அதிகாரிகள்!

திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் அர்ஜுன் பாண்டியன். இவரின் உறவினர் தீனதயாளன் தினகர் பாண்டியன், அவரின் மனைவி சித்ரா. இவர்களின் பொது அதிகாரத்தின் அடிப்படையில் அர்ஜூன் பாண்டியன், 01.07.2025 -ம் தேதி சென்னை பெர... மேலும் பார்க்க

காதல் திருமணம்: கணவரிடம் இருந்து பிரிக்க மாந்திரீக பூஜை -பெண்ணைக் கடத்திய பெற்றோர் உட்பட 6 பேர் கைது

நாமக்கல் மாவட்டம், கொக்கராயன்பேட்டை அடுத்த தேவனாம்பாளையத்தைச் சேர்ந்த விஜய் (22) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த அர்ச்சனா என்பவரும் காதலித்து கடந்த ஜூன் மாதம், திருமணம் செய்து... மேலும் பார்க்க

Delhi CM: டெல்லி முதல்வர் ரேகாவை தாக்கிய குஜராத் இளைஞர் கைது; நடந்த சம்பவத்திற்கு காரணம் என்ன?

டெல்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று காலையில் தனது வீட்டில் வாராந்திர மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்தார். அந்நேரம் அங்கு வந்த ஒருவர் முதல்வர்... மேலும் பார்க்க