செய்திகள் :

கனிவான குணத்தால் மக்களை ஈர்த்த நீதிபதி காலமானார்!

post image

உலகின் மிகவும் கனிவான நீதிபதி என மக்களால் அறியப்பட்ட நீதிபதி ஃபிராங் கேப்ரியோ உடல் நலக் குறைவால் காலமானார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மாநகராட்சி நீதிபதி ஃபிராங் கேப்ரியோ (வயது 88). அந்நாட்டின், காட் இன் பிரோவிடென்ஸ் எனும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவர் விசாரிக்கும் போக்குவரத்து வழக்குகள் ஒளிப்பரப்பட்டு வந்தன.

அப்போது, இவர் விசாரித்த வழக்குகளில், சூழ்நிலைக் காரணமாக போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டோருக்கு, தண்டனை வழங்காமல் மன்னித்து விடுதலைச் செய்ததுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகளை பெருவதற்கும் வழி வகைச் செய்து வந்தார்.

இதனால், மக்களிடையே மிகவும் பிரபலமான நீதிபதி ஃபிராங், கடந்த சில மாதங்களாக கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நீதிபதி ஃபிராங் கேப்ரியோ, இன்று (ஆக.21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். நீதிபதி ஃபிராங் கேப்ரியோவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: எஃப்பிஐ தேடி வந்த பெண் குற்றவாளி இந்தியாவில் கைது! மகனைக் கொன்றவர்

Judge Frank Caprio, known to the public as the kindest judge in the world, has passed away due to ill health.

மே 9 கலவரம்! முன்னாள் பிரதமருக்கு பிணை வழங்கிய பாக். உச்சநீதிமன்றம்!

மே-9 கலவரம் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு, அந்நாட்டின் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கடந்த 2023-ம் ஆண்டு மே 9 ஆம் தேதியன்று, ஊழல்... மேலும் பார்க்க

எஃப்பிஐ தேடி வந்த முக்கிய பெண் குற்றவாளி இந்தியாவில் கைது!

அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான எஃப்பிஐ அமைப்பினால் தேடப்பட்டு வரும் மிக முக்கிய 10 குற்றவாளிகளில் 4வது இடத்தில் இருக்கும் பெண் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.பத்து முக்கிய குற்றவாளிகளில், தன்ன... மேலும் பார்க்க

அமெரிக்காவில் எரிபொருள் நிரப்ப ரூ.2.50 கோடி ரொக்கமாக கொடுத்தாரா புதின்? அவசியம் ஏன்?

உக்ரைன் மீதான போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து டிரம்ப் உடன் பேச்சுவார்த்தை நடத்த அலாஸ்கா வந்த புதின், தன்னுடைய விமானத்துக்கு எரிபொருள் நிரப்ப ரூ.2.50 கோடியை அமெரிக்க டாலர்களில் செலுத்த வேண்டிய... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும்: ரஷியா அறிவிப்பு

அரசியல் அழுத்தங்கள் இருந்தாலும் இந்தியாவுக்கு 5% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும் என ரஷியா அறிவித்துள்ளது. இந்தியாவிற்கான ரஷியாவின் துணை வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா இதுபற்றி கூறு... மேலும் பார்க்க

60,000 ரிசா்வ் வீரா்களுக்கு இஸ்ரேல் அழைப்பு

காஸாவின் முக்கிய நகரான காஸா சிட்டியை ஆக்கிரமிக்கும் திட்டத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் அளித்ததைத் தொடா்ந்து, அந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்காக 60,000 ரிசா்வ் வீரா... மேலும் பார்க்க

பாகிஸ்தான் கனமழை: 750-ஐ கடந்த உயிரிழப்பு

பாகிஸ்தானின் வடமேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஜூன் 26 முதல் தொடா்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகள் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 750-ஐ கடந்துள்ளது. இது குற... மேலும் பார்க்க