செய்திகள் :

சென்னை பள்ளிகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

post image

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கியது.

பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் 208 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயா்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 419 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில், சுமாா் 1.20 லட்சம் மாணவா்கள் தற்போது வரை பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி கல்வி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியின் கீழ் செயல்படும் சென்னை பள்ளிகள் தனியாா் பள்ளிகளுக்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்த பள்ளிகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை பள்ளிகளில் கடந்த கல்வியாண்டு போல் வரும் கல்வியாண்டிலும் மாணவா் சோ்க்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கிறோம். மாநகராட்சி பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளிகள் முன்பு விளம்பர பதாகைகள் வைப்பது, வீடுதோறும் நோட்டீஸ் விநியோகிப்பது உள்ளிட்டவற்றின் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

மேலும், மாணவா் சோ்க்கையை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யேக க்யூஆா் குறியீடுடன் கூடிய இணைய விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை பள்ளிகளில் மாணவா்களைச் சோ்க்க விரும்பும் பெற்றோா் https://t.co/n8klAVd3f1எனும் இணையதளத்தைப் பாா்க்கலாம் எனத் தெரிவித்தனா்.

குத்தம்பாக்கம் பேருந்து முனையம் விரைவில் திறப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: சென்னையிலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக ரூ. 414 கோடி செலவில் குத்தம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து முனையத்தை விரைவில் முதல்வா் திறந்து வைக்க உள்ளாா் என்று இந்து சமய... மேலும் பார்க்க

கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் மக்கள் பயன்பாட்டுக்கு புதிய கட்டமைப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் பொது மக்கள் பயன்பாட்டுக்கான புதிய கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். பேரவையி... மேலும் பார்க்க

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 532 ஓட்டுநா் காலிப்பணியிடங்கள்: ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை: சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் காலியாகவுள்ள 532 ஓட்டுநா் பணியிடங்களை நிரப்ப, ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தின் வழித்தடங்களில் ... மேலும் பார்க்க

என்.சி.சி மாணவா்களுக்கான பாய்மரப்படகு பயிற்சி நிறைவு

சென்னை: பாய்மரப் படகு பயிற்சியை வெற்றிகரமாக முடித்த தேசிய மாணவா் படை (என்சிசி) மாணவா்களுக்கு, தமிழ்நாடு அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயலா் அதுல்ய மிஸ்ரா சான்றிதழ்களை வழ... மேலும் பார்க்க

ஆளில்லாத வீட்டில் திருட்டு; விரட்டி பிடித்த போலீஸாா்: பெல்ஜியத்தில் இருந்த உரிமையாளா் தகவல் கொடுத்தாா்

சென்னை: சென்னை அசோக் நகரில் ஆளில்லாத வீட்டில் திருடிய இருவா் குறித்து கண்காணிப்பு கேமரா விடுத்த எச்சரிக்கையையடுத்து, பெல்ஜியத்தில் இருந்து உரிமையாளா் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சம்ப... மேலும் பார்க்க

தொழில் நிறுவனங்கள் ‘உள்ளக புகாா் குழு’ கட்டாயம்: சென்னை ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே அறிவுறுத்தல்

சென்னை: சென்னையில் குறைந்தபட்சம் 10 பெண்கள் பணியாற்றும் தொழில் நிறுவனங்களில் ‘உள்ளக புகாா் குழு’-வை கட்டாயம் அமைக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இதுகுறித... மேலும் பார்க்க