கழுத்தளவு நீரில், மைக்குடன் நேரலை.. பாகிஸ்தான் பத்திரிகையாளர் வெள்ளத்தில் சென்றத...
சென்னை: `போலீஸ்னு எனத் தெரியாம தப்பு பண்ணிட்டோம்’ - காவலர் கொடுத்த புகாரில் இளைஞர்கள் கைது
சென்னை அண்ணா நகர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் மாரியப்பன். இவர் கடந்த 16.07.2025-ம் தேதி இரவு, அண்ணாநகர் கிழக்கு, 1வது அவென்யூ பகுதியில் உள்ள மதுபான கடை அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைப் பார்த்த காவலர் மாரியப்பன், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்களிடம் கலைந்து செல்லும்படி கூறினார்.
அப்போது இளைஞர்கள் இருவரும் காவலர் மாரியப்பனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு அவரை கீழே தள்ளியிருக்கிறார்கள். அதில் சுதாரித்த காவலர் மாரியப்பன், இருவரையும் மடக்கிப் பிடிக்க முயன்றார். அப்போது மீண்டும் காவலர் மாரியப்பனை கீழே தள்ளிவிட்ட இளைஞர்கள், தங்களுடைய பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவலர் மாரியப்பன், அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். சிசிடிவியில் பதிவான பைக்கின் பதிவு நம்பரை அடிப்படையில் சென்னை ஐசிஎஃப் கக்கன்ஜி நகரைச் சேர்ந்த அபிலாஷ், (19), சென்னை நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த அஜய்குமார் (21) ஆகியோரை போலீஸார் பிடித்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது காவலர் என்று தெரியாமல் தப்பு செய்துவிட்டோம். மன்னித்துவிட்டுவிடுங்கள் என போலீஸாரிடம் கூறியிருக்கிறார்கள். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் பைக், ஐபோனை பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் அவர்களை சிறையில் அடைத்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.