சென்னை மெட்ரோ ரயில்களில் 39 கோடி பேர் பயணம்!
சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஏப்ரல் மாதம் வரை 39 கோடி பேர் பயணம் செய்திருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் சேவை முதன்முதலாக கடந்த 2015-ஆம் ஆண்டு ஆலந்தூர் - கோயம்பேடு வழித்தடத்தில் ஜூன் மாதம் 29-ஆம் தேதி தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து படிப்படியாக பல்வேறு வழித்தடங்களுக்கும் மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
சென்னை மாநகர் போகுவரத்து நெரிசல் காரணமாக மெட்ரோ ரயிலுக்கு வரவேற்பு மக்களிடையே அதிகரித்தது. இதனால் மாதந்தோறும் மெட்ரோ ரயிலில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், விரைவில் மாதாந்திர பயணிகள் எண்ணிக்கை 1 கோடியை தொடும் என்று அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.