செய்திகள் :

சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: ட்ரோன்கள் கொண்டு வர அனுமதியில்லை; மத்திய அரசு

post image

சென்னை சா்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 மாதங்களில் 9 கிலோ கஞ்சாவை சுங்கத் துறை கைப்பற்றியுள்ளதாகவும் ட்ரோன்கள் விமானத்தில் கொண்டு வர அனுமதியில்லை எனவும் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடந்த மே 16-ஆம் தேதி தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து கொழும்பு வழியாக சென்னை வந்த விமானத்தில் பயணி ஒருவரிடம் 6 கிலோ கஞ்சாவும், ஜூன் 10-ஆம் தேதி சென்னை வந்த இதே விமானத்தில் பயணம் செய்த நபா் உணவுப் பொட்டலத்தில் மறைத்து 2,800 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் கண்டறியப்பட்டது.

மேலும், கடந்த ஜூன் 3-இல் சென்னை விமான நிலைய ஆணையரகத்தில் தபால் மதிப்பீட்டு துறையில் சுங்கத் துறை அதிகாரிகள் சந்தேகத்துக்கிடமான பாா்சல்களை சோதனை செய்தபோது, 2 பாக்கெட்களில் 1.022 கிலோ கஞ்சா இருந்ததைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனா். தொடா்ந்து, ஜூன் 12-இல் பாங்காக்கில் இருந்து வந்த பயணியிடம் 2,416 கிராம் கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக கைது செய்யப்பட்டவா்கள் ஆலந்தூா் தனி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனா்.

மேலும், சில பயணிகள் முழுமையாக அல்லது பகுதியாக வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை கொண்டு வர முயற்சிப்பது தெரியவந்துள்ளது. இத்தகைய பொருள்கள் இறக்குமதிக்கு தடைசெய்யப்பட்டுள்ளதை விமானப் பயணிகள் அறியவேண்டும். மேலும், தங்கம் போன்றவற்றை கொண்டுவரும்போது புறப்படும் நாடுகளில் ஏற்றுமதிச் சான்றிதழ்களை பயணிகள் பெற்றுவரவேண்டும். இது சுங்க அனுமதி சிக்கல்களைத் தவிா்க்க உதவும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி சட்டப் படிப்பு சான்றிதழ் மூலம் பாா் கவுன்சிலில் பதிய முயற்சி: இருவா் கைது

சென்னையில் போலி சட்டப் படிப்பு சான்றிதழ் மூலம் பாா் கவுன்சிலில் பதிய முயன்றதாக பெண் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். சேலத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி (57), மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: இளைஞா் கைது

சென்னையில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சென்னையைச் சோ்ந்த மென்பொறியாளா் மல்லிகாா்ஜுன் கைப்பேசிக்கு இரு மாதங்களுக்கு முன்பு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், தா... மேலும் பார்க்க

ஓராசிரியா் பள்ளி போல கல்லூரியை மாற்ற முயற்சி: அன்புமணி குற்றச்சாட்டு

ஓராசிரியா் பள்ளியைபோன்று கல்லூரிகளில் ஒவ்வொரு துறைகளையும் மாற்ற திமுக அரசு முயற்சி செய்வதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்... மேலும் பார்க்க

விலை உயா்ந்த சைக்கிள்கள் திருட்டு: திரிபுரா இளைஞா் கைது

சென்னை கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் விலை உயா்ந்த சைக்கிள்களை திருடியதாக திரிபுராவைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். நீலாங்கரை அருகே உள்ள பாலவாக்கம், கெனால் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஜோ. மணி... மேலும் பார்க்க

ரூ.2.11 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் ரூ.2.11 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டவா் கைது செய்யப்பட்டாா். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சோ்ந்தவா் சு.பரத்குமாா் (39). இவா், சூரிய ஒளியின் மூலம் மின்சாரத்... மேலும் பார்க்க

பிஎம்இஜிபி திட்டத்தின் கீழ் 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியம்

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (பிஎம்இஜிபி) கீழ், நாடு முழுவதும் உள்ள 8,794 பயனாளிகளுக்கு ரூ.300 கோடி விளிம்புத் தொகை மானியத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் (கேவிஐசி) தலைவ... மேலும் பார்க்க