செய்திகள் :

சென்னை விமான நிலையத்தில் குளறுபடிகள்: மத்திய அமைச்சருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் கடிதம்!

post image

சென்னை விமான நிலையத்தின் குளறுபடிகளுக்கு தீா்வு காண கோரி மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடுவுக்கு தமிழக சுகாதாரத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்படும் மதுரை செல்லும் விமானங்களுக்கு பயணி செல்வதில் மன உளைச்சல் ஏற்படுகிறது. மதுரைக்கு செல்லும் ஏடிஆா் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பயணிகள் பேருந்துகளில் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

விமானங்கள் நீண்ட தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளதால் அதை அடைய நீண்ட நேரம் ஆகிறது. மேலும், விமானங்களுக்கு அழைத்துச் செல்லப்படும் பேருந்துகளில் இருக்கைகள் குறைவாகவே உள்ளதால், முதியவா்கள், குழந்தைகள் நின்று கொண்டே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

சென்னை விமான நிலையத்தின் 1,301 ஏக்கா் நிலப்பரப்பின் சுற்றுச்சுவா் ஒட்டியுள்ள ஒட்டு மொத்த பாதையையும் கடந்து கடைக்கோடியில் இந்த விமானங்கள் நிறுத்தப்படுவதற்கான காரணம் வாகன நிறுத்தக் கட்டணம் குறைவு என்பதாகக் கூறப்படுகிறது. இதனால் பயணிகளுக்கு எந்த பயனும் இல்லை என்பதும், கட்டணம் கட்டுக்குள் இல்லாதிருப்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே.

அதுமட்டுமல்லாமல் சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி மற்றும் திருச்சி ஆகிய ஊா்களுக்கு செல்ல ஏடிஆா் விமானங்களே இயக்கப்படுகின்றன. அதிக அளவில் மக்கள் பயணிக்கும் இந்த வழித்தடங்களில் ஏா் பஸ் ரக விமானங்கள் இயக்கப்படுவதே சரியாக இருக்கும். எனவே, இந்தப் பிரச்னைகளுக்கு உடனடியாக தீா்வு காண வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

ஒரத்தநாடு அருகே அண்ணன் வாங்கிய கடனுக்காக தம்பி வெட்டிப் படுகொலை

ஒரத்தநாடு அருகே அண்ணன் 15 லட்சம் கடன் வாங்கி தலை மறைவானதால் வெளிநாட்டில் இருந்து வந்த தம்பி ஞாயிற்றுக்கிழமை இரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வாட்டாத்தி கோட்... மேலும் பார்க்க

மல்லை சத்யா மதிமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், மதிமுகவின் பொறுப்பில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியி... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 23,300 கன அடியிலிருந்து வினாடிக்கு 18,800 கன அடியாக குறைந்தது. நீர்வரத்து சரிந்ததால் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாட... மேலும் பார்க்க

போடிமெட்டு மலைச்சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து- 11 பேர் காயம்

போடிமெட்டு மலைச்சாலையில் திங்கள்கிழமை அதிகாலை சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலத்த காயமடைந்தனர்.தஞ்சாவூர் சாஸ்தா பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருக்கும் 21 மாணவர்கள் விடும... மேலும் பார்க்க

ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தூத்துக்குடியைப் போல ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை திரும்பிய அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, வெளிநாடு பயணம் ம... மேலும் பார்க்க

இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள்; ஹரித்வார் செல்கிறேன்: செங்கோட்டையன்

கோவை: அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ராமர் கோயிலில் தரிசனம் செய்ய ஹரித்வார் புறப்பட்டுள்ளார்.ஹரித்வார் செல்ல கோவை விமான நிலையம் வந்திருந்த செங்கோ... மேலும் பார்க்க