செய்திகள் :

சென்னை விமான நிலையத்தில் ரூ.7 கோடி போதைப் பொருள் பறிமுதல்

post image

பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்பிலான 6.9 கிலோ உயரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சுங்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சென்னை சா்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு தனியார் பயணிகள் விமானத்தில் வந்து வெளியேறிக்கொண்டிருந்த பயணிகளை மத்திய அதிகாரிகள் கண்காணித்தனா்.

அப்போது, சுங்கத்துறை மோப்ப நாய், சென்னையைச் சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவரின் உடமையை மோப்பம் பிடித்து, போதைப் பொருள் இருந்ததை கண்டுபிடித்துக் கொடுத்ததுடன் அதே இடத்தில் தரையில் அமர்ந்து கால் நகங்களால், தரையை கீரி சைகை காட்டியது.

இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பயணியின் உடமையை திறந்து பார்த்து பரிசோதித்த போது, அதனுள் இருந்த 3 பார்சல்களில், பதப்படுத்தப்பட்ட உயரக கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

உடனடியாக சுங்க அதிகாரிகள் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, கடத்தல் ஆசாமியை கைது செய்தனர்.

இதையும் படிக்க |முறையாக சமைக்காத இறைச்சியிலிருந்து பரவும் ஜிபிஎஸ்: மருத்துவா்கள் எச்சரிக்கை

பறிமுதல் செய்யப்பட்ட 6.9 கிலோ உயரக பதப்படுத்தப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடி என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அந்த பயணியிடம் விசாரணை நடத்திய போது, இவர் கஞ்சா கடத்தலுக்காக கடந்த இரு நாள்களுக்கு முன்பு பாங்காக் சென்று விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்துள்ளார். இவரை பாங்காக் அனுப்பி வைத்த ஆசாமி, சென்னை விமான நிலையத்திற்கு வந்து, கஞ்சாவை வாங்கிக் கொண்டு, கடத்தல் வேலைக்காக இவருக்கு கொடுக்க வேண்டிய அன்பளிப்பு பணத்தையும் கொடுத்து விடுவதாக கூறியிருந்தார்.

ஆனால், பயணி சுங்கத்துறையிடம் சிக்கிக் கொண்டது தெரிந்ததும் அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.7 கோடி மதிப்புடைய உயரக கஞ்சா போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயிர் கடன் தள்ளுபடி எப்போது?: அண்ணாமலை கேள்வி

2021 தேர்தல் பிரசாரத்தின்போது ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து சிறு, குறு விவசாயிகளின் பயிர்க் கடன்கள் தள்ளுபடி என்று வாக்குறுதி அளித்த மு.க.ஸ்டாலின், முதல்வராகி நான்கு ஆண்டுகள் கடந்தும் இன்று வர... மேலும் பார்க்க

காலை உணவில் பல்லி: 14 மாணவ,மாணவிகளுக்கு சிகிச்சை

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அடுத்த நரசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வியாழக்கிழமை காலை (பிப்.6) மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட காலைசிற்றுண்டியில் பல்லி இறந்து கிடந்தை பாா்க்காமல் சாப்பிட... மேலும் பார்க்க

பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலையை இடமாற்றம் செய்யக்கூடாது!: ராமதாஸ் வலியுறுத்தல்

நாராயணசாமி நாயுடு புகழை மேலும், மேலும் பரப்ப வேண்டிய காலத்தில் அவரது சிலையை அகற்றி வேறிடத்தில் வைக்க முயல்வது நியாயமல்ல. இந்த முயற்சியை பெரம்பலூர் நகராட்சியும், தமிழக அரசும் கைவிட வேண்டும் என பாமக நிற... மேலும் பார்க்க

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம் : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் பள்ளி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.திண்டிவனம் அருகிலுள... மேலும் பார்க்க

சேலத்தில் விடாமுயற்சி வெளியானது! ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!!

சேலம்: சேலத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'விடாமுயற்சி ’ திரைப்படம் வெளியானதையடுத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் அஜித் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தும் உற்சாகமாக கொண்டாடினர்.இயக்குநர் மகிழ் திரு... மேலும் பார்க்க

மீன் ஏற்றிச் சென்ற வேன் டயர் வெடித்து விபத்து: சாலையில் கொட்டிய மீனை போட்டி போட்டு அள்ளிச் சென்ற மக்கள்!

வேலூர்: அகரம் சேரி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மீன் ஏற்றிச் சென்ற வேன் டயர் வெடித்து விபத்துக்கள்ளானதில் சாலையில் கொட்டிய மீன்களை அந்த பகுதி மக்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றன... மேலும் பார்க்க