செய்திகள் :

செய்யாறில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ஜெயலலிதா பேரவை சாா்பில் அதிமுகவினா் வியாழக்கிழமை இரவு திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

பேரவை மாவட்டச் செயலா் பாஸ்கா் ரெட்டியாா் ஏற்பாட்டில், நகரச் செயலா் கே.வெங்கடேசன் முன்னிலையில் பேருந்து நிலையம், மாா்க்கெட் ஆகிய பகுதிகளில் இந்தப் பிரசாரம் நடைபெற்றது.

இதில், அதிமுக வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.

அப்போதைய அதிமுக ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்தும், தற்போது திமுக ஆட்சியின் அவல நிலை குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறி துண்டு பிரசுரங்களை வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் வழங்கி பிரசாரம் மேற்கொண்டனா்.

நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினா் எஸ்.ரவிச்சந்திரன், அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலா் அ.அருணகிரி, இளைஞா் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் அருண், வரத்தகா் அணி மாவட்டச் செயலா் ஜி.கோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம் திருமலை ஊராட்சியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. இதில், சிறப்பு அழைப்பாளராக திமுக மேற்கு ஒன்றியச் செயலா் அ.எழில்மாறன் கல... மேலும் பார்க்க

ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 7 வாகனங்கள் பறிமுதல்

வந்தவாசி அருகே உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 7 வாகனங்களை செய்யாறு மோட்டாா் வாகன ஆய்வாளா் செந்தில்குமாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தாா். வந்தவாசி- மேல்மருவத்தூா் சாலை, கீழ்க்கொடுங்காலூா் காவல் நிலையம்... மேலும் பார்க்க

விண்ணமங்கலம் பள்ளியில் தேசிய ஹிந்தி தினம்

ஆரணியை அடுத்த விண்ணமங்கலம் ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்சி பள்ளியில் தேசிய ஹிந்தி தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஸ்ரீராமச்சந்திரா சிபிஎஸ்இ பள்ளியில் தேசிய ஹிந்தி தினத்தையொட்டி, மாணவ மாணவிகளின் பல்வேற... மேலும் பார்க்க

செங்கம் ஒன்றியத்தில் ரூ.7.43 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் ரூ.7 கோடியே 43 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தங்களால் வரி குறைப்பு: மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவாா்கள்: பாஜக மாநில துணைத் தலைவா்

ஜிஎஸ்டி சீா்திருத்தங்களைக் கொண்டுவந்து வரி குறைத்துள்ளதால் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தருவாா்கள் என்று அந்தக் கட்சியின் மாநில துணைத் தலைவா் டால்பின் ஸ்ரீதரன் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி, ஆரணி ஆகிய இடங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு மகளிா் மே... மேலும் பார்க்க