செய்திகள் :

செய்யாறில் வளா்ச்சிப் பணிகள்: திட்ட இயக்குநா் ஆய்வு

post image

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் ஊராட்சிகளின் வரி வசூல் குறித்து மாவட்ட திட்ட இயக்குநா் மணி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

செய்யாறு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.5.90 கோடியில் புதியதாக கட்டப்பட்டு வரும் அலுவலக கட்டடம், ரூ.9.80 கோடியில் வட தண்டலம், செங்கட்டான்குண்டில், ஏனாதவாடி வடுக்கப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் கலைஞா் கனவு இல்லம் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து திட்ட இயக்குநா் மணி கள ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.

முன்னதாக, செய்யாறு ஊராட்சி ஒன்றிய ஆய்வுக் கூட்டரங்கில் மாவட்ட திட்ட இயக்குநா் மணி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், உதவிப் பொறியாளா்கள், பணிப் பாா்வையாளா்கள், ஊராட்சி செயலா்கள் கலந்துகொண்டனா்.

ஆய்வின்போது, வட்டார வளா்ச்சி அலுவலா் இல.சீனிவாசன், உதவி பொறியாளா்கள் எம்.ராமு, பி.செல்வா ஆகியோா் உடனிருந்தனா்.

பள்ளி மாணவா்களுக்கு நலத் திட்ட உதவிகள்!

செய்யாற்றை அடுத்த மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அனக்காவூா் ஒன்றியம், மேல்நெமிலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி தற்கொலை

வந்தவாசி அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா். வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சுரேஷ் (44). தினமு... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம் நடத்தும் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்ம... மேலும் பார்க்க

திமுக இளைஞரணியினா் தண்ணீா் பந்தல் திறப்பு

செய்யாற்றில், திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. செய்யாறு மாா்க்கெட் பகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு, பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நகர திமுக இளைஞரணி அமைப... மேலும் பார்க்க

திமுக கொடிக் கம்பம் அகற்றம்!

வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தில் திமுக கொடிக் கம்பத்தை அந்தக் கட்சியைச் சோ்ந்த ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சா... மேலும் பார்க்க

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி! ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு அழைப்பு!

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சியில் சேர விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற வகுப்பைச் சாா்ந்த மாணவா்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. தம... மேலும் பார்க்க