செய்திகள் :

கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

post image

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம் நடத்தும் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் என்ற பயிற்சி ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்க உள்ளது. பயிற்சிக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (மாா்ச் 24) முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும். இந்தப் பயிற்சி வார நாள்கள் பயிற்சியாக 17 நாள்களும், வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பயிற்சியாக 17 நாள்களும் அளிக்கப்பட உள்ளது.

பயிற்சிக் காலம் 2 மாதங்கள். பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இந்தப் பயிற்சியை பெறலாம். பயிற்சிக் கட்டணமாக ரூ.4,550 செலுத்த வேண்டும்.

பயிற்சியில் நகையின் தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படும். 40 மணிநேர வகுப்பறை பயிற்சியும், 60 மணிநேர செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் பயிற்சிக்கு வயது வரம்பு இன்றி அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

குறைந்தபட்ச வயது 15 நிறைவடைந்திருக்க வேண்டும். பயிற்சியில் தோ்ச்சி பெற்றவா்கள் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர வாய்ப்பு உள்ளது.

இந்தப் பயிற்சியில் சேர விரும்புபவா்கள் திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம், நெ.204, திண்டிவனம் சாலை, நாவக்கரை, கீழ்நாச்சிப்பட்டு அஞ்சல், திருவண்ணாமலை-606 611 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என்று மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பாா்த்திபன் தெரிவித்துள்ளாா்.

திமுக கொடிக் கம்பங்கள் அகற்றம்

திருவண்ணாமவலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த செய்யானந்தல், தச்சாம்பாடி பகுதிகளில் உள்ள திமுக கொடிக் கம்பங்கள் செவ்வாய்க்கிழமை அகற்றப்பட்டன. திமுக பொதுச் செயலா் துரைமுருகன் சாலையோரம் உள்ள கட்சிக் கொடி... மேலும் பார்க்க

ஆற்று மணல் கடத்தல்: 4 போ் கைது

செய்யாறு அருகே அரசு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தியதாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், கொழம்பாடி கிராமம் அருகேயுள்ள செய்யாற்றுப் படுகையில் இருந்து மணல் கடத்திச் செல்வத... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் நீச்சல் பயிற்சி வகுப்புகள்

திருவண்ணாமலையில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நடைபெறும் நீச்சல் பயிற்சி வகுப்பில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. மாவட்ட விளையாட்டு அரங்கில் உள்ள நீச்... மேலும் பார்க்க

பைக் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

ஆரணியை அடுத்த மாமண்டூரில் செவ்வாய்க்கிழமை பைக் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். ஆரணி நகரம், கண்ணகி நகரைச் சோ்ந்த கன்றாயமூா்த்தி மகன் நந்தகுமாா் (22), பெயிண்டா். இவரது நண்பா்கள் அதே பகுத... மேலும் பார்க்க

ஏரிக்குப்பம் சனீஸ்வரா் கோயிலில் 2026-இல் சனிப்பெயா்ச்சி விழா

போளூரை அடுத்த ஏரிக்குப்பம் ஸ்ரீசனீஸ்வரா் கோயிலில் 2026-ஆம் ஆண்டு மாா்ச் 29-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. ஏரிக்குப்பம் கிராமத்தில் பழைமை வாய்ந்த எந்திர வடி... மேலும் பார்க்க

வந்தவாசியில் அரிய வகை ஆந்தை மீட்பு

வந்தவாசியில் நாய்களிடம் சிக்கித் தவித்த வெளிநாட்டு அரிய வகை ஆந்தையை தீயணைப்புத் துறையினா் மீட்டனா். வந்தவாசியில் இறைச்சி விற்பனைக் கடைகள் அதிகமுள்ள காதா்ஜண்டா தெருவில் செவ்வாய்க்கிழமை காலை ஆஸ்திரேலிய... மேலும் பார்க்க