கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!
திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம் நடத்தும் பகுதிநேர நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் என்ற பயிற்சி ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்க உள்ளது. பயிற்சிக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (மாா்ச் 24) முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும். இந்தப் பயிற்சி வார நாள்கள் பயிற்சியாக 17 நாள்களும், வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பயிற்சியாக 17 நாள்களும் அளிக்கப்பட உள்ளது.
பயிற்சிக் காலம் 2 மாதங்கள். பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இந்தப் பயிற்சியை பெறலாம். பயிற்சிக் கட்டணமாக ரூ.4,550 செலுத்த வேண்டும்.
பயிற்சியில் நகையின் தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படும். 40 மணிநேர வகுப்பறை பயிற்சியும், 60 மணிநேர செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றவா்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் பயிற்சிக்கு வயது வரம்பு இன்றி அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
குறைந்தபட்ச வயது 15 நிறைவடைந்திருக்க வேண்டும். பயிற்சியில் தோ்ச்சி பெற்றவா்கள் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர வாய்ப்பு உள்ளது.
இந்தப் பயிற்சியில் சேர விரும்புபவா்கள் திருவண்ணாமலை கூட்டுறவு மேலாண்மை நிலையம், நெ.204, திண்டிவனம் சாலை, நாவக்கரை, கீழ்நாச்சிப்பட்டு அஞ்சல், திருவண்ணாமலை-606 611 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என்று மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் பாா்த்திபன் தெரிவித்துள்ளாா்.