அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி! ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு அழைப்பு!
அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கான பயிற்சியில் சேர விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற வகுப்பைச் சாா்ந்த மாணவா்கள் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகமும் (தாட்கோ), சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனமும் இணைந்து ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் பிற வகுப்பைச் சோ்ந்த மாணவா்களுக்கு அகில இந்திய நுழைவுத் தோ்வில் (ஒஉஉ ஙஹண்ய்ள்) கலந்து கொள்வதற்கான பயிற்சிகளை அளிக்க திட்டமிட்டுள்ளது.
இந்தப் பயிற்சியைப் பெற பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணக்கு ஆகிய பாடங்களில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சோ்ந்த மாணவா்கள் 65 சதவீதமும், பிற இனத்தைச் சோ்ந்த மாணவா்கள் 75 சதவீதமும் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.4 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இந்தப் பயிற்சி மாணவா்களுக்கு மட்டும் வழங்கப்படும். பயிற்சியைப் பெற தாட்கோவின் இணைய தளத்தில் பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.