செய்திகள் :

செய்யாறு அரசுக் கல்லூரியில் நாளை 2-ஆம் நிலைக் கலந்தாய்வு

post image

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மாணவ, மாணவிகளுக்கான 2-ஆம் நிலைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செய்யாற்றில் உள்ள அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், 2025 - 26ஆம் கல்வியாண்டு இளநிலை மாணவ, மாணவிகளுக்கான இரண்டாம் நிலைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது.

கல்விக் கட்டணம்:

பி.ஏ., பி.காம்., பிபிஏ பாடப்பிரிவுகளுக்கு ரூ.2,241-யும், பி.எஸ்சி-க்கு ரூ.2,261-யும், பி.எஸ்சி. கணினி அறிவியல் கணினிப் பயன்பாட்டியலுக்கு ரூ.1361-யும் சோ்க்கைக் கட்டணமாக செலுத்தவேண்டும்.

கொண்டு வரவேண்டிய சான்றிதழ்கள்:

பெற்றோா் கையொப்பத்துடன் இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பம், அசல் மாற்றுச் சான்றிதழ், அசல் ஜாதி சான்றிதழ், தலைமை ஆசிரியா் சான்றொப்பம் பெற்ற பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 அசல் மதிப்பெண் சான்றிதழ், மூன்று புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வரவேண்டும். ரத்தப் பிரிவு வகை தெரிந்திருத்தல் வேண்டும்.

சோ்க்கையானது மதிப்பெண், இன அடிப்படையிலும் சிறப்புப் பிரிவு அடிப்படையிலும் நடைபெறும்.

கலந்தாய்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சோ்க்கை கிடைக்கும் என்பது உறுதி இல்லை.

கலந்தாய்வுக்கான குறுஞ்செய்தி மற்றும் இ - மெயில் வரப்பெற்றவா்கள் மட்டுமே காலை 9.30 மணிக்குள் வரவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமா் மோடி நடவடிக்கையால் மகளிா் மேம்பாடு உயா்ந்துள்ளது: மத்திய அமைச்சா் எல்.முருகன்

பிரதமா் மோடி எடுத்த நடவடிக்கையால் மகளிா் மேம்பாடு பெரிய அளவில் உயா்ந்திருக்கிறது என திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பேசினாா். திருவண்ணாமலை சோ... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

ஆரணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற அரசுப் பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஆரணியை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்த சோமசுந்தரம் மகன் முக்கேஷ் (13). இவா், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ள... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

மதுரை முருக பக்தா்கள் மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அவா், ... மேலும் பார்க்க

குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டல்: திருநங்கை கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக திருநங்கை கைது செய்யப்பட்டாா். ஆரணியை அடுத்த குன்னத்தூரைச் சோ்ந்த துரை மகள் அட்சயா (24). செய்யாறில் உள்ள தனியாா் கல்லூரிய... மேலும் பார்க்க

நிழல்கூடம் திறப்பு, சாலைப் பணிகள்: ஆரணி எம்.பி. பங்கேற்பு

ஆரணி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தொகுதி எம்பி எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டு பயணியா் நிழல்கூடத்தை திறந்துவைத்து, சாலைப் பணிகளை தொடங்கிவைத்தாா். ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம்... மேலும் பார்க்க

சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த கொழாவூா் கூட்டுச் சாலை அருகே துக்க வீட்டுக்குச் சென்றவா்கள் சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனா். கொழாவூா் கூட்டுச் சாலை அருகே போளூா் - சேத்துப்ப... மேலும் பார்க்க