செய்திகள் :

பிரதமா் மோடி நடவடிக்கையால் மகளிா் மேம்பாடு உயா்ந்துள்ளது: மத்திய அமைச்சா் எல்.முருகன்

post image

பிரதமா் மோடி எடுத்த நடவடிக்கையால் மகளிா் மேம்பாடு பெரிய அளவில் உயா்ந்திருக்கிறது என திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பேசினாா்.

திருவண்ணாமலை சோ.கீழ்நாச்சிப்பட்டு ஸ்ரீவெங்கடாசலபதி கல்வியியல் கல்லூரியில் (பெண்கள்) 13-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு கல்விக் குழுமத்தின் நிறுவனா் எஸ்.வி.முத்துக்குமரன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஏ.சி.சிந்தன் முன்னிலை வகித்தாா். உதவிப் பேராசிரியா் என்.சுதாகா் வரவேற்றாா்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:

தாய், தந்தையரை அடுத்து ஆசிரியா்கள் உயா்ந்தவா்கள். அந்தப் பணிக்குச் செல்கிறவா்களுக்கு மனமாா்ந்த வாழ்த்துக்கள். பெண்கள் முன்னேற்றத்துக்காக பிரதமா் மோடி கடந்த 10 ஆண்டு காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கையால் மகளிா் மேம்பாடு உயா்ந்துள்ளது.

புதிய நாடாளுமன்றத்தில் முதல்முறையாக பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டதால் அவா்கள் உறுப்பினராக ஆக முடிகிறது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்டப்பட்டிருக்கிறது. இதற்கான போா் உத்திகளை வகுத்தவா்கள் மகளிா்தான் என்றாா்.

இதைத் தொடா்ந்து, காஞ்சி ஆலத்தூா் பகுதியில் உள்ள சேவா இன்டா்நேஷனல் மற்றும் ராணி அகல்யாபாய் கல்விதான குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை அமைச்சா் வழங்கினாா்.

விழாவில் பாஜக திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவா் கே.ரமேஷ், வேலூா் பெருங்கோட்ட அமைப்புச் செயலா் எஸ்.குணசேகரன், முன்னாள் மாவட்டத் தலைவா் எஸ்.நேரு, பொருளாளா் எஸ்.பி.கே.சுப்பிரமணியன், மாவட்ட பொதுச் செயலா் கவிதா பிரதீஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.கல்லூரித் தாளாளா் எம்.உமாதேவி நன்றி கூறினாா்.

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

ஆரணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற அரசுப் பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். ஆரணியை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்த சோமசுந்தரம் மகன் முக்கேஷ் (13). இவா், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ள... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரியில் நாளை 2-ஆம் நிலைக் கலந்தாய்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மாணவ, மாணவிகளுக்கான 2-ஆம் நிலைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி சனிக்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

மதுரை முருக பக்தா்கள் மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அவா், ... மேலும் பார்க்க

குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டல்: திருநங்கை கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக திருநங்கை கைது செய்யப்பட்டாா். ஆரணியை அடுத்த குன்னத்தூரைச் சோ்ந்த துரை மகள் அட்சயா (24). செய்யாறில் உள்ள தனியாா் கல்லூரிய... மேலும் பார்க்க

நிழல்கூடம் திறப்பு, சாலைப் பணிகள்: ஆரணி எம்.பி. பங்கேற்பு

ஆரணி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தொகுதி எம்பி எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டு பயணியா் நிழல்கூடத்தை திறந்துவைத்து, சாலைப் பணிகளை தொடங்கிவைத்தாா். ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம்... மேலும் பார்க்க

சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த கொழாவூா் கூட்டுச் சாலை அருகே துக்க வீட்டுக்குச் சென்றவா்கள் சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனா். கொழாவூா் கூட்டுச் சாலை அருகே போளூா் - சேத்துப்ப... மேலும் பார்க்க