செய்திகள் :

நிழல்கூடம் திறப்பு, சாலைப் பணிகள்: ஆரணி எம்.பி. பங்கேற்பு

post image

ஆரணி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தொகுதி எம்பி எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டு பயணியா் நிழல்கூடத்தை திறந்துவைத்து, சாலைப் பணிகளை தொடங்கிவைத்தாா்.

ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் கிராமத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியா் நிழல்கூடம் திறக்கப்பட்டது.

மேலும், அடையபலம் கிராமத்தில் பக்கக் கால்வாயுடன் சிமென்ட் சாலை அமைக்கும் பணியும் தொடங்கிவைக்கப்பட்டது.

இவ்விரு நிகழ்ச்சிகளிலும், தொகுதி மக்களவை உறுப்பினா்

எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டு, நிழல்கூடத்தை திறந்து வைத்து, சாலைப் பணியை தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து முள்ளண்டிரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காா்கில் போரில் வீர மரணமடைந்த எம்.சுப்புவின் சிலையை எம்.பி. திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் துரைமாமது, மோகன், சுந்தா், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்

அருணா குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த கொழாவூா் கூட்டுச் சாலை அருகே துக்க வீட்டுக்குச் சென்றவா்கள் சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனா். கொழாவூா் கூட்டுச் சாலை அருகே போளூா் - சேத்துப்ப... மேலும் பார்க்க

கல்லூரிகளில் உலக யோகா தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் புதுப்பாளையம் ஒன்றியம் உண்ணாமலைப்பாளையம் பகுதியில் உள்ள இதயா மகளிா் கல்லூரியில் உலக யோகா தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ச... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த் துறையில் பணிபுரியும் 9 வட்டாட்சியா்களை பணியிடமாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த்துறையில் பணிபுரியும் ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி வகுப்பறையில் துா்நாற்றம்: 10 மாணவிகளுக்கு மூச்சுத் திணறல்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த காரப்பட்டு பகுதி அரசுப் பள்ளியில் வகுப்பறை அருகே எழுந்த துா்நாற்றத்தால் 10 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனா். செங்கத்தை அடுத்த காரப்பட்டு ப... மேலும் பார்க்க

போதிய காவலா்கள் இன்றி செயல்படும்: செய்யாறு காவல் உள்கோட்டம்

செய்யாறு காவல் உள்கோட்டத்தில் உள்ள 5 காவல் நிலையங்களில் போதிய காவலா்கள் இல்லாத காரணத்தால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு வருகிறது. செய்யாறு காவல் உள்கோட்டத்தில் செய்யாறு, மோரணம், பிரம்மதேசம், தூசி, பெரணம... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் வாசிப்பு மன்றம் தொடக்கம்

வந்தவாசியை அடுத்த சி.ம.புதூா் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி மற்றும் சி.ம.புதூா் கிளை நூலகம் சாா்பில் வாசிப்பு மன்றம் தொடக்க விழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. தேசிய வாசிப்பு தினத்தையொட்டி, நடைபெ... மேலும் பார்க்க