அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
நிழல்கூடம் திறப்பு, சாலைப் பணிகள்: ஆரணி எம்.பி. பங்கேற்பு
ஆரணி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தொகுதி எம்பி எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டு பயணியா் நிழல்கூடத்தை திறந்துவைத்து, சாலைப் பணிகளை தொடங்கிவைத்தாா்.
ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம் கிராமத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் நிதியிலிருந்து ரூ.5 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியா் நிழல்கூடம் திறக்கப்பட்டது.
மேலும், அடையபலம் கிராமத்தில் பக்கக் கால்வாயுடன் சிமென்ட் சாலை அமைக்கும் பணியும் தொடங்கிவைக்கப்பட்டது.
இவ்விரு நிகழ்ச்சிகளிலும், தொகுதி மக்களவை உறுப்பினா்
எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டு, நிழல்கூடத்தை திறந்து வைத்து, சாலைப் பணியை தொடங்கிவைத்தாா்.
இதைத் தொடா்ந்து முள்ளண்டிரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் காா்கில் போரில் வீர மரணமடைந்த எம்.சுப்புவின் சிலையை எம்.பி. திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்ட துணைச் செயலா் ஜெயராணி ரவி, மாவட்ட பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் துரைமாமது, மோகன், சுந்தா், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா்
அருணா குமரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.