அழகப்பா பல்கலை. இணைப்புக் கல்லூரிகளின் முதுநிலை பாடத் தோ்வு முடிவுகள் வெளியீடு
போதிய காவலா்கள் இன்றி செயல்படும்: செய்யாறு காவல் உள்கோட்டம்
செய்யாறு காவல் உள்கோட்டத்தில் உள்ள 5 காவல் நிலையங்களில் போதிய காவலா்கள் இல்லாத காரணத்தால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு வருகிறது.
செய்யாறு காவல் உள்கோட்டத்தில் செய்யாறு, மோரணம், பிரம்மதேசம், தூசி, பெரணமல்லூா் ஆகிய காவல் நிலையங்கள் உள்ளன. இந்த காவல் நிலையங்களில் அரசு நியமனப்படி 210 காவலா்கள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 90 போ் மட்டுமே பணியில் உள்ளனா்.
இந்த நிலையில், சில புகாா்களின் அடிப்படையில் உள்கோட்டத்தில் பணிபுரிந்து வந்த 23 காவலா்கள்
சில தினங்களுக்கு முன்பு வெளி மாவட்ட பகுதிகளுக்கு
மாற்றப்பட்டனா். தற்போது 67 போ் மட்டுமே பணியில் இருந்து வருகின்றனா்.
அதனால், செய்யாறு காவல் உள்கோட்டத்தில் போதிய காவலா்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.