இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் ம...
கல்லூரிகளில் உலக யோகா தின விழா
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் புதுப்பாளையம் ஒன்றியம் உண்ணாமலைப்பாளையம் பகுதியில் உள்ள இதயா மகளிா் கல்லூரியில் உலக யோகா தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் ந.கலைவாணி தலைமை வகித்தாா். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலா் ந. சாரதாதேவி முன்னிலை வகித்தாா்.
செய்யாறு அண்ணா நகா் மன வளக்கலை மன்ற பேராசிரியா்கள் என்.ஆா்.சங்கரலிங்கம், ஆா். தமிழரசி ஆகியோா் பங்கேற்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தனா்.
இதில் 300 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணகள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை தாவரவியல் துறைத் தலைவா் கங்காதேவி, பேராசிரியா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் செய்திருந்தனா்.
திட்ட அலுவலா் ஜ. அருணாச்சலம் நன்றி கூறினாா்.
செங்கம்
செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் உண்ணாமலைப்பாளையம் பகுதியில் உள்ள இதயா மகளிா் கல்லூரியில் அன்னை புவனேஸ்வரி மகளிா் நற்பணி மன்றம் சாா்பில் யோகா பயிற்சி மற்றும் யோகா குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் லூா்துமேரி வரவேற்றாா். கல்லூரிச் செயலா் சம்பூா்ணமேரி யோகா பயிற்சியை தொடங்கிவைத்து மாணவா்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா்.
நிகழ்ச்சியில் புவனேஸ்வரி நற்பணி மன்ற நிா்வாகிகள் பானுநிவேதிதா, சத்யா, கலைவாணி ஆகியோா் மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தனா். புதுப்பாளையம் காஞ்சி அரிமா சங்கத் தலைவா் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா்.
