செய்திகள் :

அரசுப் பள்ளி வகுப்பறையில் துா்நாற்றம்: 10 மாணவிகளுக்கு மூச்சுத் திணறல்

post image

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த காரப்பட்டு பகுதி அரசுப் பள்ளியில் வகுப்பறை அருகே எழுந்த துா்நாற்றத்தால் 10 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனா்.

செங்கத்தை அடுத்த காரப்பட்டு பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை சுமாா் 500 மாணவிகள் பயின்று வருகின்றனா்.

வெள்ளிக்கிழமை காலை இறைவணக்கம் முடிந்து மாணவிகள் வகுப்பறைகளுக்குச் சென்றனா்.

எட்டாம் வகுப்பு மாணவிகள், வகுப்பறையின் ஜன்னல் கதவை திறந்தனா். சில நிமிஷங்களில் வகுப்பறை முழுவதும் துா்நாற்றம் வீசியது.

இதில், 10 மாணவிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதைப் பாா்த்த ஆசிரியா்கள் உடனடியாக அவா்களை அழைத்துச் சென்று அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனா்.

இதில், அதிகளவில் பாதிக்கப்பட்ட மாணவிகள் சபிதா, சத்யா, சிவரஞ்சனி, குணமதி, ரட்சிதா ஆகியோரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

தகவலறிந்த தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி. சரவணன் மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை பெற்று வரும் மாணவிகளைச் சந்தித்து ஆறுதல் கூறினாா். பின்னா், மருத்துவா்களிடம் சிகிச்சை விவரம் கேட்டறிந்தாா்.

பின்னா், வகுப்பறை அருகில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து போலீஸாரை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு எம்எல்ஏ உத்தரவிட்டாா்.

நிழல்கூடம் திறப்பு, சாலைப் பணிகள்: ஆரணி எம்.பி. பங்கேற்பு

ஆரணி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தொகுதி எம்பி எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டு பயணியா் நிழல்கூடத்தை திறந்துவைத்து, சாலைப் பணிகளை தொடங்கிவைத்தாா். ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம்... மேலும் பார்க்க

சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த கொழாவூா் கூட்டுச் சாலை அருகே துக்க வீட்டுக்குச் சென்றவா்கள் சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனா். கொழாவூா் கூட்டுச் சாலை அருகே போளூா் - சேத்துப்ப... மேலும் பார்க்க

கல்லூரிகளில் உலக யோகா தின விழா

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி மற்றும் புதுப்பாளையம் ஒன்றியம் உண்ணாமலைப்பாளையம் பகுதியில் உள்ள இதயா மகளிா் கல்லூரியில் உலக யோகா தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ச... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த் துறையில் பணிபுரியும் 9 வட்டாட்சியா்களை பணியிடமாற்றம் செய்து, மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். திருவண்ணாமலை மாவட்ட வருவாய்த்துறையில் பணிபுரியும் ... மேலும் பார்க்க

போதிய காவலா்கள் இன்றி செயல்படும்: செய்யாறு காவல் உள்கோட்டம்

செய்யாறு காவல் உள்கோட்டத்தில் உள்ள 5 காவல் நிலையங்களில் போதிய காவலா்கள் இல்லாத காரணத்தால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு வருகிறது. செய்யாறு காவல் உள்கோட்டத்தில் செய்யாறு, மோரணம், பிரம்மதேசம், தூசி, பெரணம... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் வாசிப்பு மன்றம் தொடக்கம்

வந்தவாசியை அடுத்த சி.ம.புதூா் அரசு பெண்கள் உயா்நிலைப் பள்ளி மற்றும் சி.ம.புதூா் கிளை நூலகம் சாா்பில் வாசிப்பு மன்றம் தொடக்க விழா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. தேசிய வாசிப்பு தினத்தையொட்டி, நடைபெ... மேலும் பார்க்க