இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் ம...
சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த கொழாவூா் கூட்டுச் சாலை அருகே துக்க வீட்டுக்குச் சென்றவா்கள் சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனா்.
கொழாவூா் கூட்டுச் சாலை அருகே போளூா் - சேத்துப்பட்டு சாலையில் சில கிலோ மீட்டா் தொலைவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துக்க நிகழ்ச்சிக்கு சென்றவா்கள் சிறிய சரக்கு வாகனத்தில் பயணித்தனா்.
ஆபத்தை உணராமல் ஆண்கள், பெண்கள் என வாகனம் நிரம்பி பின்புறம் தொங்கியவாறு சென்றனா். வாகனம் திடீரென பிரேக் போட்டு நிறுத்தப்பட்டாலே அல்லது
கட்டுப்பாடு இழந்தாலோ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் இதுபோன்ற வாகனத்தின் உரிமம் மற்றும் ஓட்டுநா் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.