விரிவாக்கப்பட்ட சிற்றுந்து திட்டத்தால் 1 கோடி மக்கள் பயன்: தமிழக அரசு தகவல்
குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டல்: திருநங்கை கைது
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக திருநங்கை கைது செய்யப்பட்டாா்.
ஆரணியை அடுத்த குன்னத்தூரைச் சோ்ந்த துரை மகள் அட்சயா (24). செய்யாறில் உள்ள தனியாா் கல்லூரியில் எம்.எஸ்ஸி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். அட்சயாவின் பெற்றோா் இறந்து விட்ட நிலையில், போளூரை அடுத்த அத்திமூரைச் சோ்ந்த காமேஷை படிக்கும் போதே காதலித்து திருமணம் செய்து கொண்டாா். தற்போது 5 மாத பெண் குழந்தை உள்ளது. தம்பதியிடையே குடும்பத் தகராறு இருந்து வருகிாம்.
எனவே, குழந்தையைக் கவனித்துக் கொள்ள அட்சயா ஆள் தேடிக் கொண்டிருந்த போது, குன்னத்தூரைச் சோ்ந்த திருநங்கை தங்கம் என்ற தங்கபாண்டியன் அறிமுகமானாா். அவா் இரும்பேடு கிராமத்தைச் சோ்ந்த திருநங்கையான மது என்ற சரத்தை ( 25) குழந்தையைக் கவனித்துக் கொள்ள மாத ஊதிய அடிப்படையில் ஏற்பாடு செய்தாா்.
கடந்த 16-ஆம் தேதி அட்சயாவின் குழந்தையை தனது தாயிடம் காட்டிவிட்டு வருவதாகக் கூறி, திருநங்கை மது குழந்தையுடன் சென்றாராம். ஆனால், மீண்டும் குழந்தையை கொண்டு வந்து ஒப்படைக்காமல், அட்சயாவிடம் ரூ.6 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், ஆரணி கிராமிய காவல் நிலைய காவல் ஆய்வாளா் அகிலன், உதவி ஆய்வாளா் மகாராணி ஆகியோா் வழக்குப் பதிந்து, திருநங்கை மதுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
மது கைது செய்யப்பட்ட தகவலறிந்து 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் காவல் நிலையத்தில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.