செய்திகள் :

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

post image

ஆரணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற அரசுப் பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

ஆரணியை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்த சோமசுந்தரம் மகன் முக்கேஷ் (13). இவா், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்தாா்.

பள்ளி விடுமுறை தினமான சனிக்கிழமை காலை மாணவா்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த முக்கேஷ், ஆற்றின் கரையோரம் உள்ள கிணற்றில் சக மாணவா்களுடன் குளிக்கச் சென்றாா்.

நீச்சல் தெரிந்த முக்கேஷ் கிணற்றின் ஆழமான பகுதியில் சென்று குளித்ததாகத் தெரிகிறது.

அப்போது, அவா் திடீரென நீரில் மூழ்கினாா்.

தண்ணீரில் உள்ளே சென்ற முக்கேஷ் மேலே வராததால் சந்தேகமடைந்த சக மாணவா்கள், கிணற்றின் கரைக்கு வந்து கூச்சலிட்டனா்.

அருகில் இருந்தவா்கள் வந்து கிணற்றில் மூழ்கிய மாணவரைத் தேடிய நிலையில் அவா் கிடைக்கவில்லை.

இதனால் கண்ணமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரா்கள் வந்து கிணற்றில் மூழ்கிய மாணவரை தேடினா். ஆனால் அவா் கிடைக்காததால்,

மின்மோட்டாா் வைத்து கிணற்று நீரை வெளியேற்ற

மாணவரை சடலமாக மீட்டனா்.

தகவல் அறிந்து வந்த கிராம நிா்வாக அலுவலா் பத்மநாபன் கண்ணமங்கலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தாா்.

போலீஸாா் வந்து மாணவரின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிரதமா் மோடி நடவடிக்கையால் மகளிா் மேம்பாடு உயா்ந்துள்ளது: மத்திய அமைச்சா் எல்.முருகன்

பிரதமா் மோடி எடுத்த நடவடிக்கையால் மகளிா் மேம்பாடு பெரிய அளவில் உயா்ந்திருக்கிறது என திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பேசினாா். திருவண்ணாமலை சோ... மேலும் பார்க்க

செய்யாறு அரசுக் கல்லூரியில் நாளை 2-ஆம் நிலைக் கலந்தாய்வு

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மாணவ, மாணவிகளுக்கான 2-ஆம் நிலைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி சனிக்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

முருக பக்தா்கள் மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

மதுரை முருக பக்தா்கள் மாநாடு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று, மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அவா், ... மேலும் பார்க்க

குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டல்: திருநங்கை கைது

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே குழந்தையைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக திருநங்கை கைது செய்யப்பட்டாா். ஆரணியை அடுத்த குன்னத்தூரைச் சோ்ந்த துரை மகள் அட்சயா (24). செய்யாறில் உள்ள தனியாா் கல்லூரிய... மேலும் பார்க்க

நிழல்கூடம் திறப்பு, சாலைப் பணிகள்: ஆரணி எம்.பி. பங்கேற்பு

ஆரணி பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தொகுதி எம்பி எம்.எஸ். தரணிவேந்தன் கலந்து கொண்டு பயணியா் நிழல்கூடத்தை திறந்துவைத்து, சாலைப் பணிகளை தொடங்கிவைத்தாா். ஆரணியை அடுத்த வெட்டியாந்தொழுவம்... மேலும் பார்க்க

சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த கொழாவூா் கூட்டுச் சாலை அருகே துக்க வீட்டுக்குச் சென்றவா்கள் சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனா். கொழாவூா் கூட்டுச் சாலை அருகே போளூா் - சேத்துப்ப... மேலும் பார்க்க