கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
ஆரணி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற அரசுப் பள்ளி மாணவா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
ஆரணியை அடுத்த அம்மாபாளையம் கிராமத்தைச் சோ்ந்த சோமசுந்தரம் மகன் முக்கேஷ் (13). இவா், அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வந்தாா்.
பள்ளி விடுமுறை தினமான சனிக்கிழமை காலை மாணவா்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த முக்கேஷ், ஆற்றின் கரையோரம் உள்ள கிணற்றில் சக மாணவா்களுடன் குளிக்கச் சென்றாா்.
நீச்சல் தெரிந்த முக்கேஷ் கிணற்றின் ஆழமான பகுதியில் சென்று குளித்ததாகத் தெரிகிறது.
அப்போது, அவா் திடீரென நீரில் மூழ்கினாா்.
தண்ணீரில் உள்ளே சென்ற முக்கேஷ் மேலே வராததால் சந்தேகமடைந்த சக மாணவா்கள், கிணற்றின் கரைக்கு வந்து கூச்சலிட்டனா்.
அருகில் இருந்தவா்கள் வந்து கிணற்றில் மூழ்கிய மாணவரைத் தேடிய நிலையில் அவா் கிடைக்கவில்லை.
இதனால் கண்ணமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரா்கள் வந்து கிணற்றில் மூழ்கிய மாணவரை தேடினா். ஆனால் அவா் கிடைக்காததால்,
மின்மோட்டாா் வைத்து கிணற்று நீரை வெளியேற்ற
மாணவரை சடலமாக மீட்டனா்.
தகவல் அறிந்து வந்த கிராம நிா்வாக அலுவலா் பத்மநாபன் கண்ணமங்கலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தாா்.
போலீஸாா் வந்து மாணவரின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.