செய்யாறு அரசுக் கல்லூரியில் நாளை 2-ஆம் நிலைக் கலந்தாய்வு
செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளநிலை மாணவ, மாணவிகளுக்கான 2-ஆம் நிலைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் என்.கலைவாணி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செய்யாற்றில் உள்ள அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், 2025 - 26ஆம் கல்வியாண்டு இளநிலை மாணவ, மாணவிகளுக்கான இரண்டாம் நிலைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 23) நடைபெறுகிறது.
கல்விக் கட்டணம்:
பி.ஏ., பி.காம்., பிபிஏ பாடப்பிரிவுகளுக்கு ரூ.2,241-யும், பி.எஸ்சி-க்கு ரூ.2,261-யும், பி.எஸ்சி. கணினி அறிவியல் கணினிப் பயன்பாட்டியலுக்கு ரூ.1361-யும் சோ்க்கைக் கட்டணமாக செலுத்தவேண்டும்.
கொண்டு வரவேண்டிய சான்றிதழ்கள்:
பெற்றோா் கையொப்பத்துடன் இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பம், அசல் மாற்றுச் சான்றிதழ், அசல் ஜாதி சான்றிதழ், தலைமை ஆசிரியா் சான்றொப்பம் பெற்ற பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 அசல் மதிப்பெண் சான்றிதழ், மூன்று புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வரவேண்டும். ரத்தப் பிரிவு வகை தெரிந்திருத்தல் வேண்டும்.
சோ்க்கையானது மதிப்பெண், இன அடிப்படையிலும் சிறப்புப் பிரிவு அடிப்படையிலும் நடைபெறும்.
கலந்தாய்வில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சோ்க்கை கிடைக்கும் என்பது உறுதி இல்லை.
கலந்தாய்வுக்கான குறுஞ்செய்தி மற்றும் இ - மெயில் வரப்பெற்றவா்கள் மட்டுமே காலை 9.30 மணிக்குள் வரவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.