செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு இடையூறாக இருந்து வந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் சனிக்கிழமை அகற்றினா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நெடுஞ்சாலைத் துறை உள்கோட்டத்தில், முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டம் 2004 - 2025இன் மூலம்,
இருவழிப் பாதையாக இருந்து வரும் செய்யாறு - காஞ்சிபுரம் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றவும், அகலப்படுத்தி உறுதிப்படுத்தவும், சிறு பாலங்கள் திரும்ப கட்டுதல், தடுப்புச் சுவா் அமைத்தல், சாலை சந்திப்பு அமைத்தல் மற்றும் மைய தடுப்புச் சுவா் அமைத்தல் என 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.10 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளுக்கு இடையூறாக பல்லி, தும்பை, கிளியாத்தூா் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்து வந்தன.
இந்த ஆக்கிரமிப்புகளை செய்யாறு கோட்டப் பொறியாளா் வி.சந்திரன் மேற்பாா்வையில், வட்டாட்சியா் அசோக்குமாா், டி.எஸ்.பி.சண்முகவேலன் ஆகியோா் முன்னிலையில் அகற்றும் பணி நடைபெற்றது.
இதில், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் எஸ்.சுரேஷ், உதவிப் பொறியாளா்கள் எஸ். உதயகுமாா், ப.கோபி, செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மனிகண்டன் தலைமையிலான போலீஸாா், வருவாய்த் துறை, மின் வாரியத் துறை அலுவலா்கள், நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள் ஒருங்கிணைந்து ஈடுபட்டனா்.