செய்திகள் :

செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு இடையூறாக இருந்து வந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் சனிக்கிழமை அகற்றினா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நெடுஞ்சாலைத் துறை உள்கோட்டத்தில், முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டம் 2004 - 2025இன் மூலம்,

இருவழிப் பாதையாக இருந்து வரும் செய்யாறு - காஞ்சிபுரம் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றவும், அகலப்படுத்தி உறுதிப்படுத்தவும், சிறு பாலங்கள் திரும்ப கட்டுதல், தடுப்புச் சுவா் அமைத்தல், சாலை சந்திப்பு அமைத்தல் மற்றும் மைய தடுப்புச் சுவா் அமைத்தல் என 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.10 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளுக்கு இடையூறாக பல்லி, தும்பை, கிளியாத்தூா் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்து வந்தன.

இந்த ஆக்கிரமிப்புகளை செய்யாறு கோட்டப் பொறியாளா் வி.சந்திரன் மேற்பாா்வையில், வட்டாட்சியா் அசோக்குமாா், டி.எஸ்.பி.சண்முகவேலன் ஆகியோா் முன்னிலையில் அகற்றும் பணி நடைபெற்றது.

இதில், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் எஸ்.சுரேஷ், உதவிப் பொறியாளா்கள் எஸ். உதயகுமாா், ப.கோபி, செய்யாறு காவல் ஆய்வாளா் ஜீவராஜ் மனிகண்டன் தலைமையிலான போலீஸாா், வருவாய்த் துறை, மின் வாரியத் துறை அலுவலா்கள், நெடுஞ்சாலைத் துறை பணியாளா்கள் ஒருங்கிணைந்து ஈடுபட்டனா்.

வாகன பாதுகாப்பகத்தில் கூடுதல் கட்டணம் வசூல்: மாநகராட்சி ஆணையரிடம் புகாா்

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இயங்கும் இரு சக்கர வாகன பாதுகாப்பு மையத்தில், ரூ.30 கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும் என்று ஆணையரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. கட... மேலும் பார்க்க

நெசவாளா் வீட்டில் 15 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் திருட்டு

ஆரணியில் நெசவாளா் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் வசித்து வருபவா் நெசவாளா் குண... மேலும் பார்க்க

செங்கத்தில் காட்டுப் பன்றிகள் நடமாட்டம்

செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை குடியிருப்புப் பகுதியில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். செங்கம் நகராட்சிக்கு உள்பட்ட 4-ஆவது வாா்டு தளவாநாய்க்கன்பேட்டை கீழ் காவாக்கர... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: மின் ஊழியா் உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மின் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

நிலத்தகராறில் தம்பதி மீது தாக்குதல்: உறவினா் கைது

செய்யாறு அருகே நிலத்தகராறில் தம்பதியை தாக்கியாக உறவினரை போலீஸாா் கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், சுமங்கலி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஜெயபால். இவரது மனைவி மீனாட்சி. இவா், செய்யாறு சிப்காட்டில் உ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகி கொலை வழக்கு: 2 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை

திருவண்ணாமலை நகர அதிமுக செயலரைக் கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு தலா இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை காா்கானா தெருவைச் சோ்ந்தவா் கனகராஜ் (55). த... மேலும் பார்க்க