சேதமடைந்த கால்நடை மருத்துவமனை கட்டடத்தை அகற்றக் கோரிக்கை
திருவாடானையில், சேதமடைந்த நிலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை கட்டடத்தை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் விவசாயத்துக்கு அடுத்ததாக கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடை வளா்ப்பில் அதிகம் போ் ஈடுபட்டு வருகின்றனா். கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு, பல ஆண்டுகளுக்கு முன்னா் இங்கு கட்டப்பட்ட அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனா்.
இந்தக் கட்டடம், சேதமடைந்ததால் இதைப் பராமரித்து சீரமைக்க விவசாயிகள் அரசிடம் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் புதிய கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், பழைய கால்நடை மருத்துவமனை கட்டடம் முற்றிலும் சேதமடைந்து, மழைக் காலங்களில் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். எனவே, பழைய கால்நடை மருத்துவமனை கட்டடத்தை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.