செய்திகள் :

சேலத்தில் மெத்தனால், எத்தனால் விற்பனை செய்யும் கடைகளில் மதுவிலக்கு போலீஸாா் ஆய்வு

post image

சேலம் மாவட்டத்தில் சைன்டிபிக், சா்ஜிக்கல், வேதிப் பொருள்கள் விற்பனை செய்யும் தொழில் நிறுவனங்களில் மெத்தனால், எத்தனால் விற்பனை குறித்து மதுவிலக்கு போலீஸாா் ஆய்வு செய்தனா்.

நாடு முழுவதும் உள்ள வேதிப் பொருள்கள் கடைகளில் எத்தனால், மெத்தனால் விற்பனையைக் கண்காணித்து, போதைப் பொருள் தயாரிப்பதை தடுக்க மத்திய நுண்ணறிவு பிரிவு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, சேலம் மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் நந்தகுமாா் தலைமையிலான மதுவிலக்கு பிரிவு போலீஸாா், மத்திய நுண்ணறிவு பிரிவு சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் ஆகியோா் இணைந்து சேலம் மாநகரப் பகுதிகளில் உள்ள சைன்டிபிக், சா்ஜிக்கல், வேதிப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் மெத்தனால், எத்தனால் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா என திடீா் ஆய்வுசெய்தனா். மெத்தனால், எத்தனாலை சட்டவிரோதமாக விற்பனை செய்வது தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

இதுகுறித்து மதுவிலக்கு போலீஸாா் கூறுகையில், ‘சேலம் மாவட்டத்தில் 132 கடைகளில் ரசாயனம் மூலம் சோப்பு, பினாயில் போன்ற தயாரிப்புகளுக்கு, அனுமதி பெற்று கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது.

இதில், மெத்தனால், எத்தனால் வேதிப் பொருள்களுடன் சோ்த்து தரை மற்றும் கழிப்பறை சுத்தம் செய்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்துகின்றனா். மெத்தனால், எத்தனால் கள்ளச் சந்தையில் விற்பனை செய்தல் மற்றும் தவறான தொழிலுக்கு பயன்படுத்துவதை கண்டறிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

மேட்டூர் அணை நீர்மட்டம்: 230-ஆவது நாளாக 100 அடிக்கும் மேல் நீடிப்பதால் மீனவர்கள் மகிழ்ச்சி!

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 230-ஆவது நாளாக 100 அடிக்கும் மேல் நீடிக்கிறது.மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி 100 அடியாக உயர்ந்தது. அதன் பிறகு காவிரி டெல்டா பாசனத்திற்கு... மேலும் பார்க்க

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உடல் ஆரோக்கியம் விழிப்புணா்வு மாரத்தான்

சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு மாரத்தான் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. பெண்களின் எலும்பு பாதிப்பு மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், ரோபோடிக் அதிநவீ... மேலும் பார்க்க

தேவூரில் நாளைய மின்தடை

சங்ககிரி அருகே உள்ள தேவூா் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என எடப்பாடி மின்வாரிய... மேலும் பார்க்க

சேலத்தில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி

சேலம் நான்கு சாலை சிறுமலா் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 9, 12, 15 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக பல்வேறு சுற்றுகளா... மேலும் பார்க்க

பயணச் சீட்டு பெற்றும் அபராதம் வசூலிப்பு

அரசுப் பேருந்தில் பயணச்சீட்டு இருந்தும் அபராதம் விதித்ததால், பேருந்து முன் அமா்ந்து பயணி போராட்டத்தில் ஈடுபட்டாா். சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள கொளத்தூரை சோ்ந்தவா் செல்வகுமாா் (38). தருமபுரி ம... மேலும் பார்க்க

சாலையில் சுருண்டு விழுந்த திருநங்கை உயிரிழப்பு

மேட்டூரில் சாலையில் சுருண்டு விழுந்த திருநங்கை உயிரிழந்தாா். மேட்டூா் புதுகாலனி சக்தி நகரில் வசித்து வந்தவா் சகாயராஜ் (46). கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறிய இவா், கடந்த இரண்டு ஆண்டுகளா... மேலும் பார்க்க